உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

கேட்கப்படும் அகத்திய சரிதத்தை நெடுங்காலம் பிந்தியவ ராகிய இவர்க்கு ஏற்றி வழங்கியனவாக நினைப்பது பொருந்தும். ஒன்றோடு ஒன்று ஒவ்வாத கால வேற்றுமையில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளை இப்பொதியின் முனிவர்க்கு ஏற்றுதல் சிறிதும் பொருந்தாமை காண்க" (மேற்படி. பக்.273)

“முதல் முதல் வடநாட்டினின்று தொன்னாடு புக்க அகத்தியர் வடபால் விந்தியத்தை அடுத்தும் தென்பால் மகேந்திரத்தை அடுத்தும் வதிதல் கூறிய வான்மீகத்தில் அவரைத் தமிழறி வுடையவராகக் கூறாமை ஈண்டைக்கு நினைக்கத் தகும். அநுமானுக்குத் தென்னாட்டு மொழியுணர்ச்சியும் வடமொழி புணர்ச்சியும் உடன்பட்டுக் கூறும் வான்மீகி முனிவர், அகத்தியரைச் சிறிதும் தென்மொழி தென்மொழி உணர்ந்தவராகப் புகலாமை பெரிதும் வியப்பைத் தருவதாகும். அவர் தமிழ் நாட்டரசரையும் அவருட் பாண்டியர் தலைநகரையும் கூறுதல் காண்க" (மேற்படி. பக். 214)

"வியாச பாரதம் சபா பருவத்தில் சகதேவன் மலயத்தை வலஞ் செய்து தாமிரபரணியைக் கடந்து கடற்கரையைச் சேர்ந்து தங்கினன் என விளக்குதல் காணலாம். அந்நூல் அகத்தியரைத் தமிழறிந்தவராகக் கூறாமை நோக்கிக் கொள்க (மேற்படி. பக்.

214)

இவ்வாறு தமிழ் வரலாறுடையார் ஆய்ந்து எழுதினும், நச்சியார்க்கினியர் முதலோர் உரைகண்டு தொல்காப்பியர்க்கு மூலவராகவும், முன் இலக்கணம் செய்தவராகவும் கூறுவது விந்தையாக உள்ளது. 'தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி' எழுதிய மு. இராகவ ஐயங்காரும் நச்சினார்க்கினியர் உரைக்குச் சான்றுதேடி நிறுவப் படாப்பாடு படுகின்றாரேயன்றி, மூலநூல் குறிப்பைப் பற்றிக் கருதினார் அல்லர்.

அகத்தியச் சூத்திரங்கள் என்று உரையாசிரியர்களால் காட்டுப்பட்டுள்ள நூற்பாக்களின் அமைதி சொல்லாட்சி ஆகியவற்றைத் தெளிந்து கூறவல்ல இவ்வறிஞர்களும் பிறர் பிறரும் 'புனைவு' கொண்டு அகத்தியரை 'முன்னவ'ராக நிலைநாட்டப் புகுந்த கருத்துடையவராகவே காட்சியளிக் கின்றனர். இனி, அகத்தியர் பற்றிய கருத்து வளர்ச்சி எப்படி வளர்கின்றதெனக் காணலாம்.

அகத்தியரின் மாணவர் பன்னிருவர் என்பதும் அவருள் தொல்காப்பியர் தலைமையானவர் என்பதும் கி.பி. ஒன்பதாம்