84
இளங்குமரனார் தமிழ்வளம்
37
வேத மொன்று கண்டிலேன் வெம்பி றப்பி லாமையால் போதம் நின்ற வடிவதாய்ப் புவன மெங்கும் ஆயினாய் சோதி யுள்ஒ ளியுமாய்த் துரிய மோட தீதமாய் ஆதி மூலம் ஆதியாய் அமைந்த தேசி வாயமே
சாண்இ ரும்ம டங்கினால் சரிந்த கொண்டை தன்னுளே பேணி அப்ப திக்குளே பிறந்தி றந் துழலுவீர் தோணி யான ஐவரைத் துறந்த றுக்க வல்லிரேல் காணி கண்டு கோடியாய்க் கலந்த தேசி வாயமே. அஞ்சு கோடி மந்திரம் அஞ்சு ளேஅ டங்கினால்
நெஞ்சு கூற உம்முளே நினைப்ப தோர்எ ழுத்துளே அஞ்சு நாலு மூன்றதாகி உம்மு ளேஅ டங்கினால் அஞ்சும் ஓர்எ ழுத்ததாய் அமைந்த தேசி வாயமே. அக்கரந்த அக்கரத்தில் உட்க ரந்த அக்கரம் சக்க ரத்துச் சிவ்வையுண்டு சம்பு ளத்தி ருந்ததும் எள்க ரந்த எண்ணெய்போல் எவ்வெ ழுத்தும் எம்பிரான் உள்க ரந்து நின்றநேர்மை யாவர் காண வல்லரே.
ஆக மத்தின் உட்பொருள் அகண்ட மூலம் ஆதலால் தாக போகம் அன்றியே தரித்த தற்ப ரம்மும்நீ
ஏக பாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செ ழுத்துளே ஏக போகம் ஆகியே இருந்த தேசி வாயமே.
மூல வாசல் மீதுளே முச்ச துரம் ஆகியே
நாலு வாசல் எண்விரல் நடுஉ தித்த மந்திரம்
கோலம் ஒன்றும் அஞ்சுமாகும் இங்க லைந்து நின்றநீ வேறு வேறு கண்டிலேன் விளைந்த தேசி வாயமே. சுக்கி லத்த டியுளே கழித்த தோர்எ ழுத்துளே அக்க ரத்த டியுளே அமர்ந்த ஆதி சோதிநீ உக்க ரத்த டியுளே உணர்ந்த அஞ்செ ழுத்துளே அக்க ரம்அ தாகியே அமர்ந்த தேசி வாயமே.
.290
291
292
293
294
295
296
குண்ட லத்து ளேயுளே குறித்த கத்து நாயகன் கண்ட வந்த மண்டலம் கருத்த ழித்த கூத்தனை விண்ட லர்ந்த சந்திரன் விளங்கு கின்ற மெய்ப்பொருள் கண்டு கொண்ட மண்டலம் சிவாயம் அல்ல தில்லையே
.297