சிவவாக்கியர்
அற்ற வுள்அ கத்தையும் அலக்கி டும்மெ ழுக்கிடும் மெத்த தீபம் இட்டதிற்ப்ர வாத பூசை ஏத்தியே நற்ற வம்பு ரிந்தேக நாத பாதம் நாடியே
99
கற்றி ருப்ப தேசரிதை கண்டு கொள்ளும் உம்முளே.
408
பார்த்து நின்ற தம்பலம் பரமன் ஆடும் அம்பலம் கூத்து நின்ற தம்பலம் கோர மான தம்பலம் வார்த்தை யான தம்பலம் வன்னி யான தம்பலம் சீற்ற மான தம்பலம் தெளிந்த தேசி வாயமே.
சென்று சென்றி டந்தொறும் சிறந்த செம்பொன் அம்பலம் அன்றும் இன்றும் நின்றதோர் அனாதி யான தம்பலம் என்றும் என்றும் இருப்பதோர் உறுதி யான அம்பலம் ஒன்றி ஒன்றி நின்றதுள் ஒழிந்த தேசி வாயமே.
தந்தை தாய்த மரும்நீ சகல தேவ தையும்நீ சிந்தை நீதெ ளிவும்நீ சித்தி முத்தி தானும்நீ விந்து நீவி ளைவுநீ மேல தாய வேதம்நீ எந்தை நீஇ றைவன்நீ என்னை ஆண்ட ஈசனே. எப்பி றப்பி லும்பிறந்த திறந்த ழிந்த ஏழைகாள் இப்பி றப்பி லும்பிறந் தென்ன நீறு பூசுறீர் அப்பு டன்ம லம்அறுத் தாசை நீக்க வல்லிரேல் செப்பு நாத ஓசையில் தெளிந்து காணல் ஆகுமே.
எட்டு யோகம் ஆனதும் இயங்கு கின்ற நாதமும் எட்டக் கரத் துளேஉ கார மும்ம காரமும் விட்ட லர்ந்த மந்திரம் வீணா தண்டின் ஊடுபோய்
409
410
411
412
அட்ட அட்ச ரத்துளே அமர்ந்த தேசி வாயமே.
413
பிரான்பி ரான்பி ரான்என்றுநீர் பிணத்து கின்ற மூடரே பிரானை விட்டும் எம்பிரான் பிரிந்த வாற தெங்ஙனே
பிரானு மாய்பி ரானுமாய் பேரு லகமும் தானுமாய்ப்
பிரானி லேமு ளைத்தெழுந்த பித்தர் காணும் உம்முடல். ஆதி யில்லை அந்தமில்லை ஆன நாலு வேதமில்லை சோதி யில்லை சொல்லுமில்லை சொல்லி றந்த தூவெளி நீதி யில்லை நேசமில்லை நிச்ச யப்ப டாததும்
414
ஆதி கண்டு கொண்டபின் அஞ்செ ழுத்தும் இல்லையே.
415