சிவவாக்கியர்
அறிந்து நோக்கி உம்முளே அயன்தி யானம் உம்முளே பிறிந்தி ராமல் ஏகர்பாதம் பெற்றி ருப்ப துண்மையே அறிந்து மீள வைத்திடா வகையு மரணம் ஏத்தினார்
செறிந்து மேலை வாசலைத் திறந்து பாரும் உம்முளே. சேதி யாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல் சோதி வந்து தித்திடும் துரியா தீதம் உற்றிடும் ஆதி சக்க ரத்தினில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன்
103
440
பேதி யாது கண்டுகொள் பிராண னைத்தி ருத்தியே.
441
திருவு மாகிச் சிவனுமாகித் தெளிந்து ளோர்கள் சிந்தையில்
மருவி லேஎ ழுந்துவீசும் வாச னைய தாகுவன்
கருவி லேவி ழுந்தெழுந்த கன்ம வாத னையெலாம்
பருதி முன்இ ருளதாகிப் பறியும் அங்கி பாருமே.
442
பாரும் எந்தை ஈசர்வைத்த பண்பி லேஇ ருந்துநீர் சேரு மேந டுவறிந்து செம்மை யான அப்பொருள் வேரை யும்மு டியையும் விரைந்து தேடி மால்அயன் பார்இ டந்து விண்ணிலே பறந்தும் கண்ட தில்லையே.
443
கண்டி லாத யன்மால்என்று காட்சியாகச் சொல்லுறீர்
மிண்டி னால்அ ரனுடன் மேவ லாயி ருக்குமோ
தொண்டு பட்டும் அன்புடன் தொழுது நோக்க வல்லிரேல் பண்டு முப்பு ரம்எரித்த பத்தி வந்து முற்றுமே.
444
முற்று மேய வன்ஒழிந்து முன்பின் ஒன்றும் காண்கிலேன்
பற்றி லாத ஒன்றுதன்னைப் பற்றி நிற்க வல்லது
கற்ற தாலே ஈசர்பாதம் காண லாயிருக்குமோ
பெற்ற பேரை அன்புடன் பிரிய மாகக் கேளுமே.
445
கேட்டு நின்ற உன்னிலை கிடைத்த காலந் தன்னுளே
வாட்டம் உள்ள தத்துவ மயக்க மும்அ கற்றிடும் வீட்டி லேவெ ளியதாகும் விளங்க வந்து நேரிடும் கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டெ ழுப்புமே. எழுப்பி மூல நாடியை இதப்படுத்த லாகுமே மழுப்பி லாத சபையைநீர் வலித்து வாங்க வல்லிரேல் சுழுத்தி யும்க டந்துபோய்ச் சொப்ப னத்தில் அப்புறம் அழுத்தி ஓர்எ ழுத்துளே அமைப்ப துண்மை ஐயனே.
446
447