சிவவாக்கியர்
கருவி னில்க ருவதாய் எடுத்த ஏழு தோற்றமும் இருவி னைப்ப யத்தினால் பிறந்தி றந்து ழன்றிடும் மறுவி னைப்பி றவிமூன்று கால மும்வ குத்தபின்
105
உறுவி னைப்ப யனிதென்ன உணர்ந்த ஞானிசொல்லுமே.
456
வாயில் எச்சில் போகவே நீர்கு டித்துத் துப்புவீர்
வாயிருக்க எச்சில்போன வாற தென்ப தெவ்விடம் வாயில் எச்சில் அல்லவோ நீர்உ ரைத்த மந்திரம் நாயி னை அ றிந்தபோது நாடும் எச்சில் ஏதுகொல்.
தொடக்க தென்று நீர்விழத் தொடங்கு கின்ற ஊமர்காள் தொடக்கி ருந்த தெவ்விடம் சுத்தி யான தெவ்விடம் தொடக்கி ருந்த வாறறிந்து சுத்தி பண்ண வல்லிரேல் தொடக்கி லாத சோதியைத் தொடர்ந்து காண லாகுமே.
மேதி யோடும் ஆவுமே விரும்பி யேபு ணர்ந்திடில் சாதி பேத மாய்உருத் தரிக்கும் ஆறு போலவே வேதம் ஓது வானுடன் புலைச்சி சென்று மேவிடில் பேத மாய்ப்பி றக்கிலாத வாற தென்ன பேசுமே.
வகைக்கு லங்கள் பேசியே வழக்கு ரைக்கும் மாந்தர்காள் தொகைக்கு லங்கள் ஆன நேர்மை நாடி யேஉ ணர்ந்தபின் மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறு ஒன்றும் கண்டிலீர்.
NHH HHHHHHHHHHEITE DERES PETIT PENTRU INN DER INNE
ஓதும் நாலு வேதமும் உரைத்த சாத்தி ரங்களும் பூத தத்து வங்களும் பொருந்தும் ஆக மங்களும் சாதி பேத வன்மையும் தயங்கு கின்ற நூல்களும்
457
458
459
460
பேத பேதம் ஆகியே பிறந்து ழன்றி ருந்ததே.
461
உறங்கில் என்வி ழிக்கில்என் உணர்வு சென்றொ டுங்கில்என்
திறம்பில் என்தி கைக்கில்என் சிலதி சைகள் எட்டில்என்
புறம்பும் உள்ளும் எங்கணும் பொதிந்தி ருந்த தேகமாய்
நிறைந்தி ருந்த ஞானிகள் நினைப்ப தேதும் இல்லையே.
அங்க லிங்கம் பூண்டு நீர் அகண்ட பூசை செய்கிறீர் அங்க லிங்கம் பூண்டுநீர் அமர்ந்தி ருந்த மார்பரே எங்கும் ஓடி எங்கும்எங்கும் ஈட ழிந்து மாய்கிறீர் செங்கல் செம்பு கல்லெலாம் சிறந்து பார்க்கும் மூடரே.
.462
463