குதம்பைச் சித்தர்
சாதிவே றென்றே தரம்பிரிப் போருக்குச்
சோதிவே றாகுமடி
சோதிவே றாகுமடி.
நீதிமான் என்றே நெறியாய் இருப்போனே
சாதிமான் ஆவானடி
சாதிமான் ஆவானடி.
சாதியொன் றில்லை சமயமென் றில்லையென்
றோதியுணர்ந் தறிவாய்
163
குதம்பாய்
143
குதம்பாய்
144
குதம்பாய்
145
ஓதியுணர்ந் தறிவாய்,
14. சமயநிலை கூறல்
தன்புத்தி தெய்வமாய்ச் சாற்றிய சார்வாகம்
புன்புத்தி ஆகுமடி
புன்புத்தி ஆகுமடி.
கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல்
புல்லறி வாகுமடி
புல்லறி வாகுமடி.
அண்டத்தைக் கண்டும் அநாதியி லென்பவர்
குதம்பாய்
146
குதம்பாய்
147
கொண்ட கருத்தவமே
கொண்ட கருத்தவமே.
பெண்ணின்ப முத்தியாய்ப் பேசும் பாடாண்மதம்
கண்ணின்மை யாகுமடி
கண்ணின்மை யாகுமடி.
சூரியன் தெய்வமாய்ச் சுட்டுஞ் சமயந்தான்
காரியம் அல்லவடி
காரியம் அல்லவடி.
மனந்தெய்வ மென்று மகிழ்ந்து கொண்டாடிய
இனமதி யீனமடி
இனமதி யீனமடி.
பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள்
கற்பனை யாகுமடி
கற்பனை யாகுமடி.
குதம்பாய்
148
குதம்பாய்
149
குதம்பாய்
150
குதம்பாய்
151
குதம்பாய்
152