64
இளங்குமரனார் தமிழ்வளம் - 37
நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி மந்திரம் நூறு கோடி நாள்இருந்தும் ஓதி னால்அ தன்பயன் ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர்எ ழுத்துமாய் ஏறு சீர்எ ழுத்தைஓத ஈசன் வந்து பேசுமே
காலை மாலை தம்மிலே கலந்து நின்ற காலனார் மாலை காலை யாய்ச்சிவந்த மாயம் ஏது செப்பிடீர் காலை மாலை அற்றுநீர் கருத்தி லேஒ டுங்கினால் காலை மாலை ஆகிநின்றகாலன் இல்லை இல்லையே.
எட்டு மண்ட லத்துளே இரண்டு மண்ட லம்வளைத் திட்ட மண்ட லத்துளே எண்ணி ஆறு மண்டலம் தொட்ட மண்ட லத்திலே தோன்றி மூன்று மண்டலம் நட்ட மண்ட லத்துளே நாதன் ஆடி நின்றதே.
நாலி ரண்டு மண்டலத்துள் நாதன் நின்ற தெவ்விடம் காலி ரண்டு மூலநாடி கண்ட தங்கு ருத்திரன் சேலி ரண்டு கண்கலந்து திசைகள் எட்டு மூடியே மேலி ரண்டு தான்கலந்து வீசி ஆடி நின்றதே.
.137
138
139
140
அம்மை அப்பன் உப்புநீர் அறிந்த தேஅ றிகிலீர் அம்மை அப்பன் உப்புநீர் அரிஅ யன்அ ரனுமாய்
அம்மை அப்பன் உப்புநீர் ஆதி யாதி ஆனபின்
அம்மை அப்பன் அன்னைஅன்றி யாரும்இல்லை ஆனதே.
141
உருத்த ரிப்ப தற்குமுன் உடல்க லந்த தெங்ஙனே கருத்த ரிப்ப தற்குமுன் காரணங்கள் எங்ஙனே
பொருத்தி வைத்த போதமும் பொருந்து மாற தெங்ஙனே
குருத்தி ருத்தி வைத்தசொல் குறித்து ணர்ந்து கொள்ளுமே.
142
ஆதி உண்டு அந்தம்இல்லை அன்றி நாலு வேதம்இல்லை சோதி உண்டு சொல்லும்இல்லை சொல்லி றந்த தேதும்இல்லை ஆதி யான மூவரில் அமர்ந்தி ருந்த வாயுவும்
ஆதி யன்று தன்னையும் யார்அ றிவதிங் கண்ணலே.
143
புலால்பு லால்பு லால்அதென்று பேத மைகள் பேசுறீர்
புலாலை விட்டே எம்பிரான் பிரிந்தி ருந்த தெங்ஙனே