மீனாட்சியம்னை குறம்
239
(தெ-ரை) பெண்டிருள் சிறந்தவளே, நீ எண்ணும் குறியை யான் சொல்லுமாறு உன் சிவந்த கையைக் கொண்டுவந்து காட்டு; எங்கள் அங்கயற் கண்ணியின் கணவராய் அருளாளர் சொக்கலிங்கப் பெருமான் விரைவில் உன்னைக் கூடுவார் அம்மா.
(அ கூடுவார்.
-
ள்.) கொடுவா
-
கொண்டுவா. அணைவார்
சிந்து (வேறு)
10. தூசும்ஒரு காசும்வைஉள் நேசம்வர வேசொல்லநான் ஈசர்கயி லாசர்மது
ரேசர்உனைச் சேர்வாரம்மே.
(தெ-ரை) அம்மா, உள்ளன்பு பெருக ஓர் ஆடையும் ஒரு காசும் நான் குறி சொல்வதற்குக் காணிக்கையாக வை; இறைவரும் கயிலாயத் துறைபவரும் ஆகிய சொக்கநாதர் உன்னைச் சேர்வார்.
(அ - ள்.) தூசு - ஆடை; உள்நேசம் வரத் தூசும் காசும் நான் (குறி) சொல்ல வை; மதுரேசர் உனைச் சேர்வர் என இயைக்க.
இது குறிபார்க்கக் காணிக்கை வேண்டியது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
11. கைக்குறியின் முகக்குறிநன்(று); இடத்தெழுந்த கவுளிநன்று; கன்னி மார்வந்(து)
இக்குறிநன் றென்கின்றார்; இடக்கண்ணும்
துடிக்கின்றது; இதன்மேல் உண்டோ?
பொய்க்குறிய சிறுமருங்குற் பூங்கொடிநீ
அங்கயற்கண் பூவை மாதின்
மெய்க்குறியும் வளைக்குறியும் முலைக்குறியும்
அணிந்தவர்தோள் மேவு வாயே.
(தெ-ரை.) இல்லையோ என்னுமாறு அமைந்த மிகச் சிறிய இடையையுடைய பூங்கொடி போன்றவளே, உன் கைக் குறியினும் முகக்குறி நலமுடையது; இடப் புறத்தே எழுந்த பல்லி சொல்லும் நலமுடையது; அன்றியும் தேவ கன்னியர் எழுவரும்