உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

263

நெகிழுமாறு ருமலைகள் போன்ற மார்புகளால் தழுவி நின்றதும், ஊடல் கொண்டு அகன்றோடி இன்பம் தந்ததும், இறைவர் பேரருளுக்கு உள்ளாகி அமைந்து நின்றதும், நிலை பெறக் கண்டுகொண்டே களிப்புற எப்பொழுது வாய்க்கும்?

(அ - ள்.) இரா நின்றது முதலிய இன்ப விளையாடல்கள் சீகாளத்தி புராணம் தழுவக் குழைந்த படலத்தில் கண்டது. இரா - இரவு (இருள்) குவடு - மலை; பொர - போரிட, தழுவ; சில பூசல் - சிறுபூசல் (ஊடல்) சில என்பது சிறுமைப் பொருள் தந்தது. புலவி நலம் ஊடல் இன்பம். "ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம், கூடி முயங்கப் பெறின்" என்பது திருக்குறள். மணவாளர் - கணவர்; “என் நெஞ்ச மணவறை என்று வாய்க்கும் என இயைக்க.

நேரிசை வெண்பா

3. மதம்பரவு முக்கண் மழகளிற்றைப் பெற்றுக் கதம்பவனத் தேயிருந்த கள்வி - மதங்கள் அடியார்க்(கு) உடம்பிருகூ றாக்கினாள் பார்க்கிற் கொடியார்க்(கு) இவைகொல் குணம்.

(தெ - ரை.) மதம் பெருகிய மூன்று கண்களையுடைய ளமையான யானையாம் மூத்த பிள்ளையாரைப் பெற்று மாடமதுரையிலே இருந்த உள்ளம் கவரும் கள்வியாகிய மீனாட்சியம்மை, பாணபத்திரர் என்னும் இசைவாணருக்கு அடியாராகிய சிவபெருமானுக்கு உடம்பை இரு கூறுபட ஆக்கினாள்; இதனை ஆராய்ந்து பார்த்தால் கொடிபோன்ற அம்மைக்கு (மகளிர்க்கு) அருட்குணம் இல்லை போலும்.

-

(அ - ள்) மழ களிறு இளைய யானை; "மழவும் குழவும் ளமைப் பொருள்" என்பது தொல்காப்பியம். கதம்பவனம் கடம்பவனம். எதுகை நோக்கி 'ட' 'த' வாகத் திரிந்தது. கடம்ப மரங்கள் நிறைந்த காடாக ஒரு காலத்து இருந்தமையால் மதுரைக்கு அஃதொரு பெயர். மதங்கன் பாடுவான்; அவன் பாணபத்திரன்; பாணபத்திரனுக்கு அடியாராக வந்து இறைவன் அருளியது, திருவிளையாடற்புராணம் விறகு விற்ற படலச் செய்தியாகும்.

-

'பண்தரு விபஞ்சி பாண பத்திரன் அடிமை என்றான் என்பது இறைவன் அடியாராகியதைச் சுட்டும்.(24)