திருவருணைக் கலம்பகம்
81
கேட்டு மறுமொழி தருவார் இல்லை' என்பார் 'யான் கைக் கொண்டிக்கும் மாந்தழை சிறந்தது' என்பார்; நின் கூந்தலை 'மணம் வாய்ந்தது' என்பார்; ஆராய்ந்து பார்ப்பின் இவர் எண்ணம் யாதாகும்? உரைப்பாயாக.
(வி-ரை.) இது தலைவியும் தோழியும் உடனிருந்தபோது தலைவன் தழை கொண்டு வந்து நின்று, "மான் முதலியன வந்தனவோ" என்று வினாவுதல் அறிந்த தோழி. "இவர் எண்ணம் யாதோ?' என்று தலைவியை வினாவியது.
கைமலை
-
கையையுடைய மலை. அஃதாவது யானை;
தழை தழையால் செய்த உடை; கான் - சோலை. (12)
13. அருணைப் பெருமாள் புயங்கள்
புயவகுப்பு
ஆசிரிய வண்ண விருத்தம்
கருணைமுக மண்டலத் தொளிர்மகர குண்டலக் கலன்மலிக வின்குழைக்(கு) உறவாய் இசைந்தன;
களபமகில் குங்குமத் தளறுகுடி கொண்டுதட் டியபுழுக ணைந்துமெய்ப் பனிநீர் துளைந்தன;
கலைமதிம ழுங்கிநத் தினம்இருள டைந்துமுத்
தொளிகருக வெண்சுதைத் திருநீ றணிந்தன;
கனலிகைய ரிந்துகட் பரிதியை முடினந்துதக்
கனைமுடித டிந்துமைத் தலையே வழங்கின;
இரணியனு ரங்கிழித் தளவறும தங்கொழித் தெழுநரம டங்கலைத் தடமார் பிடந்தன; இமயமட மங்கைபொற் புளகலிரு கொங்கையின் சுவடுபட இன்பமுற் றதிலே குழைந்தன; இரவிகிர ணங்கொழித் ததிசயமு டன்கிளைத் தெழுபவழ வன்பொருப் பெனவே வளர்ந்தன;
இதழியர விந்தமுற் பலமகிழ்செ ருந்திகட்
குரவலரி சண்பகத் தொடையான் நிறைந்தன;
தரியலர்பு ரங்கெடச் சுரர்நார்ப் யங்கெடத்
தமனியநெ டுஞ்சிலைச் சிலைலநாண் எறிந்தன;