இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
122
இளங்குமரனார் தமிழ்வளம் - 39
கூச்சல் என்ன செய்தது
கூடிச் சேர வைத்தது!
வஞ்ச நெஞ்சம் வந்தவர் தம்மை
வன்கொலை செய்தது.
இத்தகு கொடுமையும் நிகழ்வுறும் என்று வள்ளுவக் கிழவர் கண்டாரோ?
என்னே! என்னே! என்று இரங்கி நின்றாரோ?
அதனால் முன்னே கண்ட தொழுத கையுள்ளும் படை யொடுங்கும் என்பதனோடு,
“ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து'
57
என்ன இணைத்தோர் குறளைத் தந்தாரோ?
(828)
நிகழ்ந்த இடம் : பஞ்சாப் -கட்வன் கோட்டே; செய்தி : தினமணி; 12-3-92.