உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வழிநடை

19

ளைஞர் குறித்திருந்த கணக்கும் சரியாக இருந்தமையைக் கண்ட தாசில்தார் காலம் நீடிக்காது இப்பயன் முன்னேற்றத்திற்கு உதவி செய்ய வேண்டும்" என்று முடிவு கொண்டார்.

தொடக்கப் படிப்புடன் இருந்த இளைஞர் உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்றார். முதல் மாணவராகவே எல்லா வகுப்புகளும் தேறினார். மாநிலம் முழுவதற்கும் ஏற்படுத்தியிருந்த கட்டுரைப் போட்டி ஒன்றிலே முதன்மையாக வெற்றியடைந்து "ஐந்நூறு ரூபா' பரிசு பெற்றார். இவர் படித்து வந்த பள்ளியில் இருந்த ஆசிரியர்களும், மேல் அதிகாரிகளும் பெரிதும் பாராட்டிச் சிறப்பித்தனர்.

இளைஞர் முதலில் மாநிலக் கல்லூரியில் ஓர் ஆசிரியராகச் சென்றார் : விரைவில் கல்வி அதிகாரியானார். பின் வழக்கறிஞர் களுக்கென இருந்த தேர்வில் முதல்வராக வெற்றியடைந்தார். அதனால் மாவட்ட முன்சீப், துணைக் கலெக்டர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்னும் உயர் பதவிகளைச் சிறப்புடன் நடத்தினார்.

உயர்மன்ற நீதிபதியாக வந்த முதல் இந்தியர் நம் இளைஞரே என்றால் நம் இளைஞரின் சிறப்புத்தான் என்னே! ஒரு ரூபாய் எழுத்து வேலை பார்த்த இளைஞர், இடையறாத முயற்சியால் உயர் நீதிமன்ற நீதிபதியாக வருவது எளிய செயலா? எல்லோர் வாழ்விலும் நடக்கக் கூடியதா? கொழுந்து விட்டெரியும் முயற்சி நம் இளைஞரிடம் இருந்தது. அது வறுமை, பிணி, எதிர்ப்பு ஆகிய இருட் படலங்களை இருந்த இடம் தெரியாமல் ஓட்டியது. இல்லையேல் உயர்நீதிமன்றத்தின் முகப்பில் இவ்விளைஞருக்குப் ‘பளிக்குச் சிலை' நிறுத்தி வைப்பார்களா?

ஓ! ஓ! இளைஞர் பெயரைச் சொல்லவில்லையோ? அவர் தாம் வீட்டிலே விளக்கு வெளிச்சம் இல்லாது தெரு விளக்கிலே படித்து முயற்சியால் முன்னுக்கு வந்த சர். தி. முத்துசாமி ஐயர்! கடல் தந்த முத்தா இளைஞர் முத்து? கடல் தராமுத்து அல்லவா!

ஆமாம் : மறந்து விட்டோமோ, முத்துசாமியைக் கடல் தரா முத்து ஆக்கிய தாசில்தார் பெயர் என்ன? நன்றி மறக்கலாமா? அவரும் ஒரு கடல் தரா முத்துதான்! அவர் போல் எத்தனை அதிகாரிகள் உண்டு? அவர் பெயர் முத்துசாமி நாயகர்! வாழ்க கடல் தரா முத்துகள் என்று வாழ்த்தத் தோன்றவில்லையா?

"முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்."