உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

-

இளங்குமரனார் தமிழ்வளம் 39

கரை புரண்டு செல்லும் வெள்ளத்தைக் கண்ட அவனுக்கு வாய்க்கால், வரப்பு, வயல் அழிக்கப்பட்டு வெள்ளத்தால் கெடுவதையும் துளிநீரும் இன்றி வறண்டு வானோக்கி ஒருபால் காடு கிடப்பதையும் நோக்கிய அவனுக்கு, நூலொடு நுண்ணறிவும் வாய்த்த அவனுக்கு ஓரெண்ணம் உண்டாயிற்று! காவிரிக்குக் கல்லால் அணைகட்ட வேண்டும் என்பதே அது.

சொல்லால் அணை கட்டினான் சோழன்! கல்லால் அணை கட்டினர் தொழிலாளர்; நெல்லால் அணை கட்டினர் உழவர்; அல்லல் பறந்தது; அமைதி நிறைந்தது; சோழநாடு சோழவள நாடு ஆயிற்று; சோழன் வளவன் ஆனான்; காவிரி பொன்யாயிற்று!

சோழ வள நாடு சோறுடைத்து என உண்மை உரைக்கவும், யானை வயலுள் புகுந்தால் நெற்பயிர் அதனை மறைக்கும் என உயர்வு உரைக்கவும், ஒரு பெண் யானை படுக்கும் இடம் ஏழு ஆண் யானைகளுக்கு உணவு தந்து காக்கும் எனப் புனைந் துரைக்கவும் ஆயிற்று சோழநாடு.

'வாழ்க சோழன்' என்று வாழ்த்துவோர்களின் ஓங்கிய குரலுக்கு இடையே, 'ஒழிக' என்போர் உதட்டு அசைவும் இல்லையாயிற்று. பற்றியெரிக்கும் பசிபுண்டானால் அன்றோ சுற்றியிருப்போர் தூண்டுதலுக்கு மக்கள் செவிசாய்ப்பர்? பொன் மலையாய் நென்மலை காட்சி தரக்கண்டோர் பொய்ப்பழியோர் மொழிக்கு இசைவாரோ?

சோழநாட்டில் ஆணை செலுத்திய வேந்தன் இமயம் வரை தன் கொடி பறக்க விரும்பினான். தீர எண்ணித் தெளிந்த முடிவு கொண்டு, எண்ணிய வண்ணமே செய்து முடிக்கும் திண்மை பெற்றவனுக்கு முடியாத செயலென ஒன்றுண்டா? இமயப் பெருமலையில் சோழன் புலிக்கொடி வீறுடன் பறந்தது; வெற்றிக் களிப்போடு மீண்டான் வேந்தன்.

குறுநில மன்னரும், பெருநில வேந்தரும் சோழன் அடிக்கீழ்ப் பணிந்து நின்றனர்; அடி பட்டதற்கு அடையாளமாக அரும் பொருள்கள் குவித்தனர்; கலைஞர்கள் ஆடிப்பாடி இன்புறுத் தினர்; கவிஞர்கள் இறவா உடலாம் எழிற்கவிகள் பாடிப் பெருமை செய்தனர்; வடநாட்டு வெற்றியால் பெற்ற உவப்பினும், தன்னாட்டுப் பாராட்டுக்கு மகிழ்ந்தான் சோழன்; பொன்னி நதி போல் பொருள் வழங்கினான். ஒரே ஒரு புலவன் 301 அடிகளைக்கொண்ட 'பட்டினப்பாலை' பாடிய புலவன்