116
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
நடையன் நாதன்
—
தொழில்
_
கல்வி
தமிழ்ப் புலவன் கபிலன்
சிறப்பையுணர்த்தும் உரிச்சொற்கள் :
கூர்ப்பும், கழிவுமாகிய இரண்டு
ஒன்றனது சிறத்தலாகிய பண்பையுணர்த்தும்.
(எ.டு) ‘துனிகூ ரெவ்வமொடு'
கழிகண்ணோட்டம்’
சினையாகு பெயர் :
உரிச்சொற்களும்
சினைப் பொருளின் பெயர் முதற் பொருளுக்கு ஆகுவது சினையாகு பெயராகும்.
(எ.டு) வெற்றிலை நாட்டான்
என்றதில் இலை எ ன்
என்னும்
சினையின் பெயர் அதன் கொடிக்கு ஆயிற்று.
‘சாயல்' என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :
சாயல் என்னும் உரிச்சொல் மென்மையாகிய பண்பை யுணர்த்தும்.
(எ.டு) ‘சாயன்மார்பு'
சீர்த்தி என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :
சீர்த்தி என்னும் உரிச்சொல் பெரும் புகழையுணர்த்தும்.
(எ-டு) 'வயங்கல் சால் சீர்த்தி’
சுழற்சியாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :
அலமரலும் தெருமரலுமாகிய இரண்டு உரிச் சொற்களும் சுழற்சியாகிய குறிப்புணர்த்தும்.
(எ-டு) அலமரலாயம்
தெருமரலுள்ள மொடன்னை துஞ்சாள்
சேர் என்னும் உரிச்சொல் உணர்த்தும் குறிப்பு :
சேர் என்னும் உரிச்சொல் திரட்சி என்னுங் குறிப் புணர்த்தும்.
(எ.டு) 'சேர்ஞ்’ செறி குறங்கு