மன்னிடைச் சொல் :
சொல்
143
மன்னென்னு மிடைச் சொல் அசைத்து நிற்றற் பொருளிலும், ஒழிந்த சொற் பொருளிலும், ஆக்கப் பொருளிலும், கழிதற் பொருளிலும், மிகுதிப் பொருளிலும், நிலை பெறுதற் பொருளிலும் வரும்.
66
""
(எ-டு) அது மற் கொண்கன்றேரே அசைநிலை
66
""
கூரியதோர் வாண்மன் ஒழியிசை
""
“பண்டு காடுமன் ஆக்கம்
""
“சிறியகட் பெறினே யெமக்கீயுமன்னே கழிவு
“எந்தை யெமக்கருளுமன்
―
மிகுதி
""
“மன்னாவுலகத்து மன்னியதுபுரிமோ நிலைபேறு
‘மா’ என்னும் இடைச் சொல் :
மா என்னும் சொல் வியங்கோளிடத்து வருகிற அசைச் சொல்லாகும்.
(எ.டு) ‘விற்கை யுண்கமா கொற்கையோனே’
என்னும் வியங்கோளை அடுத்து அசையால் வந்தது.
‘மாதர்’ என்னும் உரிச் சொல் உணர்த்துங் குறிப்பு :
இதில் உண்க
மாதர் என்னும் உரிச்சொல் காதல் என்னுங் குறிப்புணர்த்தும்.
(எ.டு)
'மாதர் நோக்கு’
மாலை என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :
மாலை என்னும் உரிச்சொல் இயல்பாகிய குறிப்புணர்த்தும். (எ-டு) 'இரவரன் மாலையானே'
முகத்தலளவையாகு பெயர் :
முகந்து அளக்கின்ற நாழி, குறுணி, கலம் 'லிட்டர்’ முதலிய முகுத்தலளவைப் பெயர்கள் அவ்வளவைக்குறிக்காமல், பொருளைக் குறிப்பது முகத்தலளவையாகு பெயர்.
(எ.டு) நாழி கொடு
என்றதில், நாழி என்னும் முகத்தலளவைப் பெயர் அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆயிற்று.