அகப்பொருள்
காமக்கிழத்தியர் இலக்கணம் :-
185
சேரிப்பரத்தையர் போலப் பலர்க்கும் உரியாரன்றி ஒரு வற்கே உரிமை பூண்டு வருங்குலப் பரத்தையர் மகளிராய்க் காமங்காரணமாகத் தலைமகனால் திருமணம் சய்து கொள்ளப்பட்டவர் காமக்கிழத்தியராவர்.
கார்காலத்தின் தன்மை :-
வாடைக் காற்று வீசலும்; செம்மூதாயும் (இந்திர கோபமும்) மயிலும், (கேகயப் பறவையும்) தோன்றி மகிழ்தலும்; வெண் காந்தள், செங்காந்தள், கொன்றை, கூதாளம், வேங்கைமரம், காக்கணஞ்செடி, முல்லை, கடம்பு, காயா முதலியன மலர்தலும்; அன்னம்கிளி குயில் அகவலும், கன்றுவருதலும், தாமரைமலர் நீரில் மறைதலும் கார்க்காலத்துத் தன்மைகளாகும்.
காவற்பிரிவின் வகை
•
தலைவன் நாடு காத்தற் பொருட்டுப் பிரியும் பிரிவு காவற் பிரிவாகும். அப்பிரிவு, அறப்புறங்காவல், நாடுகாவல் என இரு வகைப்படும். அறப்புறங்காவலாவது. அறத்திற்கு விடப்பட்ட நிலம், அறச்சாலை முதலியவற்றைக் காத்தலாம்.
காவற் பிரிவிற்கு உரியார் :
அறப்புறங்காவல் அரசர் முதலிய அனைவர்க்கும் உரியதாம். அரசனும், அரசனாற் சிறப்புப் பெயர் பெற்றவரும் நாடுகாவற் பிரிவிற்குச்சிறப்பாக உரியராவர்.
க
காலமாகிய முதற்பொருளின் வகை
பொழுது என்னும் முதற்பொருள், பெரும்பொழுது என்றும் சிறுபொழுது என்றும் இரண்டு பாகுபாட்டினை யுடையதாம்.
கிழத்தி மகிழ்ச்சி :-
தலைவியின் மகிழ்ச்சி. இது தலைவிதான் வருந்தா திருந்ததன் காரணத்தைப் பாங்கிக்கு உரைத்தலால் விளங்கும். கிழவோன் மகிழ்ச்சி :-
து
தலைவன் மகிழ்ச்சி - இது தலைமகன் தலைவியின் முன் பாங்கியைப் புகழ்தலால் விளங்கும்.