186
இளங்குமரனார் தமிழ்வளம் 4
―
குறிஞ்சிக்குரிய பெரும் பொழுதும் சிறுபொழுதும் :
கூதிர்காலமும், முன் பனிக்காலமும், யாமப்பொழுதும் குறிஞ்சித்திணைக்குரிய பெரும் பொழுதும், சிறுபொழுது
L
மாகும்.
குறிஞ்சிக்கருப்பொருள் :-
தெய்வம் - முருகன்
தலைமையர் - பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி,
கொடிச்சி
மக்கள் - குறவர், கானவர், குறத்தியர்.
புள் - கிளி, மயில்
விலங்கு - புலி, கரடி, யானை, சிங்கம்.
ஊர் - சிறுகுடி
நீர் - அருவிநீர், சுனைநீர்
பூ - வேங்கைப்பூ, குறிஞ்சிப்பூ, காந்தட்பூ.
மரம் - சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில் உணவு - மலைநெல், மூங்கிலரிசி, தினை.
பறை - தொண்டகப்பறை
யாழ் - குறிஞ்சியாழ்
பண் - குறிஞ்சிப்பண்
தொழில் - வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினை காத்தல், தேனழித்தெடுத்தல், கிழங்கு கிண்டி எடுத்தல், அருவி நீராடல், சுனை நீராடல்.
குறிப்பறிதல் :
தலைமகளுள்ளத்து
நிகழுகின்ற
வேட்கையினைத்
(புணருங்குறிப்பினை) தலைமகனுக்கு அவளது கண்களே விளங்க அறிவிக்கும்.
எடு :-
“இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.