அகப்பொருள்
219
அதற்குத் தலைவன் உங்களை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு எனக் கூறுதலும், தலைவியை ஆற்றுவித்திருந்த அருமையைத் தலைமகனுக்குத் தோழி கூறுதலும் ஆகிய இருபத்தொன்றும் வரைவிடைத்துப் பொருவயிற் பிரிதலின் விரியாகும்.
வரும் வழிக்கலங்கல் :
வினைமுற்றிய தலைவன் மீண்டு வரும் வழியில் தலைவியின் நிலையை எண்ணி வருந்துதல் வரும் வழிக் கலங்கலாகும்.
வன்புறை : (அ)
தலைவன்
பிரிந்தவிடத்துத் தலைவி வருந்துவாள். அவ்வாறு வருந்துந்தலைவியைத் தோழி இடித்துக் கூறுதல் வன்புறையாகும்.
வன்புறை
(ஆ)
தலைவி ஐயுற்றவழித் தலைவன் ஐயம் நீ ங்க வற்புறுத்திக் கூறுதல் வன்புறையாகும். வன்பு - வலிமை. உறை - உறுத்தல். இது ஐயந்தீர்த்தல், பிரிவுறுத்தல் என இருவகைப்படும். ஐயந்தீர்த்த லாவது தலைவிக்குண்டான ஐயத்தைத் தலைவன் நீக்குதல். பிரி வுறுத்தலாவது தலைவன் தன்பிரிவைத் தலைவிக்கு அறிவித்தல். வன்பொறை :
தலைவி வலிதிற் பொறுத்துக்
தலைவன் பிரிவைத் தலைவி கொள்ளுதல் வன்பொறையாகும்.
வாயில் நேர்தல் :
பாணன்
முதலியவர்களின்
கூற்றுக்கிணங்கத்
தலைமகள் வாயிலை ஏற்றுக் கொள்ளுதல் வாயில் நேர்தலாகும்.
வாயில் நேர்வித்தல் :
பாணன், தோழி முதலியோர் தலைமகளை வாயிலை ஏற்றுக் கொள்ளுமாறு செய்தல் வாயில் நேர்வித்தலாகும். வாயில் மறுத்தல் :
பாணன் முதலியவர்களைத் தலைமகன் அனுப்பத் தலைவி மறுத்தல் வாயில் மறுத்தலாகும்.
வாயில் வேண்டல் :
வாயிலாக
பரத்தையிற் பிரிந்த தலைமகன் தோழியைத் தனக்கு வாயி லாகுமாறு வேண்டுதல் வாயில் வேண்டலாகும்.