234
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
காணா விளமை யார் கண்டிவனோ நின்றிலேன் மாணாருள் யார்பிழைப்பார் மற்று
இஃது வருதார் தாங்கல்.
“ஆடும் பொழுதி னறுகயிற்றுப் பாவைபோல்
வீடுஞ் சிறுவன்றாய் மெய்ம் மகிழ்ந்தாள்-வீடுவோன் வாள்வாயின் வீழ்ந்த மறவர்தந் தாயரே
கேளா வழுதார் கிடந்து
இது வாள் வாய்த்துக் கவிழ்தல்.
இருவரும் தபுநிலை:
இருவர் படையும் போர் செய்து மடிந்தமையாலே, இரண்டு மன்னரும் தம்முட் போர் செய்து மடிந்தது இருவரும் தபுநிலை என்னும் துறையாம்.
(எ.டு)
66
காய்ந்து கடுங்களிறு கண்கனலக் கைகூடி வேந்தர் இருவரும் விண்படர-ஏந்து
பொருபடை மின்னப் புறங்கொடா பொங்கி இருபடையும் நீங்கா இகல்
ல்லவை நகுதல்:
தலைவி தலைவன் செய்யாதனவற்றைச் செய்தனவாகச் சொல்லி நக்கது இல்லவை நகுதல் என்னும் துறையாம். (எ.டு)
"முற்றா முலையார் முயங்க இதழ்குழைந்த
நற்றார் அகலம் நகைதரலின்- நற்றார்
கலவேம் எனநேர்ந்துங் காஞ்சிநல் லூர
புலவேம் பொறுத்தல் அரிது.”
இல்லாள் முல்லை:
காதலுடைய
கணவனைத் தொழுதெழும் கற்புடை
இல்லாளின் இயல்பு மிகுதியைக் கூறியது இல்லாள் முல்லை
என்னும் துறையாம்.