236
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
விரையாற் கமழும் விறல்மலை நாடன் உரையால் தளிர்க்கும் உயிர்.”
உவகைக் கலுழ்ச்சி:
பகைவரது வாளாலே விழுப்புண் பட்டு மாய்ந்தவனது உடலைக் கண்டு, மறக்குடிப் பிறந்த அவனது இல்லாள் உவந்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தது உவகைக் கலுழ்ச்சி என்னும் துறை
யாம்.
(எ.டு)
"வெந்தொழிற் கூற்றமும் நாணின்று வெங்களத்து
வந்த மறவர்கை வாள்துமிப்பப்- பைந்தொடி
ஆடரிமா அன்னான் கிடப்ப அகத்துவகை ஓடரிக்கண் நீர்பா யுக.
உழபுலவஞ்சி:
வஞ்சி வேந்தன் தன் பகைவருடைய வளப்பம் பொருந்திய நாட்டினைத் தீக் கொளுத்தியது உழபுலவஞ்சி என்னுந்துறையாம். (எ.டு)
66
அயிலன்ன கண்புதைத் தஞ்சி யலறி
மயிலன்னார் மன்றம் படரத்-குயிலகவ
ஆடிரிய வண்டிமிரும் செம்மல் அடையார்நாட்டு ஓடெரியுள் வைகின ஊர்”
உழிஞைத்திணை:
உழிஞை என்னும் புறத்திணை மருதம் என்னும் அகத் திணைக்குப் புறனாம். அது, முழுமையான தலைமையையுடைய பகைவரின் மதிலைக் கைப் பற்றுதலும், அழித்தலுமாகிய வழக் தினை லக்கணமாகவுடையது. இத்திணையார் உழிை ை மாலையைச் சூடிக்கொள்வர்.
உழுதுவித்திடுதல்:
உழிஞையார் நொச்சியாரது பலவேறு அரண்களையும் கழுதையாகிய ஏரினைப் பூட்டி உழும்படி செய்து வரகையும் கொள்ளையும் விதைத்தது உழுது வித்திடுதல் என்னும் துறையாம்.