246
(எ.டு)
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
“வாய்வாட் டானை வயங்குபுகழ்ச் சென்னிநின் னோவா வீகையி னுயிர்ப்பிடம் பெறாஅர் களிறுகவர் முயற்சியிற் பெரிது வருந்தினரே யுலகங் காவலர் பலர்விழித் திருப்ப வறிதுதுயில் கோடல் வேண்டுநின் பரிசின் மாக்களுந் துயில்கமா சிறிதே”
கண்படைநிலை:-(ஆ)
பகைவரை வென்று அவர் நிலத்தைக் கைப்பற்றிய தறு கண்மையுடைய மன்னரது உறக்கத்தைப் பாராட்டியது கண் படைநிலை என்னும் துறையாம்.
(எ.டு)
"கொங்கலர்தார் மன்னருங் கூட்டளப்பக் கூற்றணங்கும் வெங்கதிர்வேல் தண்தெரியல் வேந்தற்குப்- பொங்கும் புனலாடை யாளும் புனைகுடைக்கீழ் வைக்க கனலா துயிலேற்ற கண்.'
கந்தழி:
ய
ஆழிப்படையை யுடைய மாயோன் வீரசோ என்னும் அரணத்தினை அழித்த வெற்றியைப் புகழ்ந்தது கந்தழி என்னும் துறையாம்.
(எ.டு)
“மாயவன் மாயம் அதுவால் மணிநிரையுள்
ஆயனா எண்ணல் அவனருளான்-காயக்
கழலவிழக் கண்கனலக் கைவளையார் சோரச்
சுழலழலுள் வைகின்று சோ.”
கபிலை கண்ணிய வேள்விநிலை:
கபில நிறப் பசுவினைக் கொடுக்கக் கருதிய கொடையினைக் கூறுவது கபிலைகண்ணிய வேள்வி நிலையாகும்.
(எ.டு)
“பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற் கற்றாதந் தின்மகிழா னந்தணரை யின்புறுப்பச்-சென்னிதன்