248
கழல் நிலை: (1)
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
கழல் கட்டிய வீரர் மழலைப் பருவத்தினையுடைய ஒருவன் களத்திடை ஓடாது நின்றமை கண்டு அவனைப் புகழ்ந்து அவ னுக்குக் கழல் கட்டுதல்.
கழல் நிலை: (2)
இகலைப் பெருக்கும் மறவர் படுதற் கிடமான போரின்கண் வலிமை மிக்க வீரன் கழல் கட்டியது கழல் நிலை என்னும் துறையாம்.
(61.6)
“வாளமரின் முன்விலக்கி வான்படர்வார் யார்கொலோ
கேளலார் நீக்கிய கிண்கிணிக்காற்-காளை
கலங்கழல் வாயிற் கடுத்தீற்றி அற்றால்
பொலங்கழல் கால்மேற் புனைவு.
களவழி வாழ்த்து:
99
ஒன்பான் இசையில் ஒன்றாகிய வெண்டுறை இசையில் வல்ல யாழ்ப்பாணர் ஒரு மன்னன் போர்க்களத்தில் கொண்ட செல்வத்தினைக் கூறியது களவழி வாழ்த்து என்னும் துறையாம்.
(எ.டு)
“ஈண்டி யெருவை யிறகுளரும் வெங்களத்து
வேண்டியாம் கொண்ட விறல்வேழம்- வேண்டாள் வளைகள் வயிரியம்பும் வாள்தானை வேந்தே விளைகள் பகர்வான் விலை."
களவேள்வி:
وو
பேய்கள் வயிறார உண்ணும் படிவாகை சூடிய வேந்தன் பகைவரைக் கொன்று களவேள்வி விட்டது களவேள்வி என்னும் துறையாம்.
(எ.டு)
“பிடித்தாடி அன்ன பிறழ்பற்பேய் ஆரக்
கொடித்தானை மன்னன் கொடுத்தான்-முடித்தலைத்
தோளோடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக
மூளையஞ் சோற்றை முகந்து.
99