களவழி பாடுதல்:
புறப்பொருள்
249
உழவர்கள் நெற்களத்திடைச் செய்யும் தொழில் யாவும் செய்து அறஞ்செய்யுமாறு போல, அரசன் போர்க்களத்துப் பகைவர்களைக் கொன்று கைக் கொண்ட பொருள்களைப் பரிசிலர்க்கு அளிக்குந்திறத்தினைப் புலவர்கள் களவழியாகப் பாடுதலாம்.
(எ.டு)
66
'ஓ ஒ வுவமை யுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெல்லாங் கீழ்மேலா யாவுதை காளாம்பி போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து
களிற்றுடனிலை:
வேல் மறவன் ஒருவன் யானை யேறிவரும் மறவனது யானையை வீழ்த்த, அவ்வியானை அவ்வேல் மறவனை வீழ்த்த, அவன் அவ்வியானையின் கீழ் வீழ்ந்து இறந்தது களிற்றுடனிலை என்னும் துறையாம்.
(எ.டு)
“இறுவரை வீழ இயக்கற் றவிந்த
தறுகண் தகையரிமாப் போன்றான்-சிறுகண்
பெருங்கைக் களிறெறிந்து பின்னதன் கீழ்ப்பட்ட
கருங்கழற் செவ்வே லவன்.'
கற்கோள்நிலை:
உலகம் வியக்குமாறு பறைகள் முழங்கத், துறக்க மெய்திய மறவனுக்குக் கற்கொண்டது கற்கோள் நிலை என்னும் துறையாம்.
(எ.டு)
"பூவொடு நீர் தூவிப் பொங்க விரைபுகைத்து நாவுடை நன்மணி நன்கியம்ப- மேவார் அழல்மறங் காற்றி அவிந்தாற்கென் றேத்திக் கழல்மறவர் கைக்கொண்டார் கல்.