250
கற்புமுல்லை: (அ)
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
பொன்போல் விளங்கும் சுணங்கினையும் பொலிந்த கண்ணினையும் உடையாளொரு தலைவி, தன் கணவனுடைய நன்மையைப் பாராட்டியது கற்பு முல்லை என்னும் துறையாம்.
(எ.டு)
“நெய்கொள் நிணந்தூ நிறைய அமைத்திட்ட குய்கொள் அடிசில் பிறர்நுகர்க- வைகலும் அங்குழைக் கீரை அடகு மிசையினும் எங்கணவன் நல்கல் இனிது.”
கற்புமுல்லை: (ஆ)
கணவன் பிரியினும் மகளிர்க்குளதாகிய நிறைகாவலைக் கூறியதும் கற்பு முல்லை என்னும் துறையாம்.
(எ.டு)
“மௌவல் விரியும் மணங்கமழ் மால்மாலைத் தௌவல் முதுகுரம்பைத் தான்தமியள்-செல்வன் இறைகாக்கும் இவ்வுலகின் இற்பிறந்த நல்லாள் சிறைகாப்ப வைகும் நிறை.”
கற்புமுல்லை: (இ
- (g)
தலைவி தன் தலைவனது செல்வம் பெருகும் இல்லத்தின் கண்ணே நிறைந்த பெருவளத்தை வாழ்த்தினும் கற்புமுல்லை என்னும் துறையாம்.
(எ.டு)
“ஊழிதோ றூழி தொழப்பட் டுலைவின்றி
ஆழிசூழ் வையத் தகமலிய- வாழி
கருவரை மார்பினெம் காதலன் நல்க வருவிருந் தோம்பும் வளம்.
கனவின் அரற்றல்: -(அ)
என்னால் விரும்பப் பட்ட இரவு அத்தலைவனொடு வரு மாயின் யான் பிழைப்பேன் எனக் கூறியது கனவின் அரற்றல் என்னும் துறையாம்.