252
(6.6)
66
இளங்குமரனார் தமிழ்வளம்
―
அருவரை பாய்ந்திறுது மென்பார்பண் டின்றிப் பெருவரைச் சீறூர் கருதிச்- செருவெய்யோன் காஞ்சி மலையக் கடைக்கணித்து நிற்பதோ தோஞ்செய் மறவர் தொழில்.
காஞ்சி யெதிர்வு:
4
வஞ்சியார் படையினது வரவினைப் பொறாத காஞ்சி மறவனுடைய வெற்றியை மிகுத்துச் சொல்லியது காஞ்சி யெதிர்வு என்னும் துறையாம்.
(எ.டு)
"மன்மேல் வருமென் நோக்கான் மலர்மார்பின்
வென்வேல் முகந்த புண் வெய்துயிர்ப்பத்-தன்வேல்
பிடிக்கலு மாற்றாப் பெருந்தகை யேவத்
துடிக்கண் புலையன் தொடும்.’
காடு வாழ்த்துதல்:
பரந்த
உலகத்தில் நிலையாமைப் பண் பு நன்கு
விளங்குமாறு தன்கண் தோன்றிய பலரும் இறந்து படவும், தான் இறந்து படாது ஊரின் புறத்த வாகிய சுடுகாட்டை வாழ்த்தும் வாழ்த்தாகும்.
(எ.டு)
66
“உலகு பொதியுருவந் தன்னுருவ மாகப்
பலர்பரவத் தக்க பறந்தலை நன்காடு
புலவுங்கொல் லென்போல் புலவுக் களத்தோ
டி கனெடுவே லானை யிழந்து"
காடு வாழ்த்து;
காட்டை
எஞ்சியோர் பலரும் உணரும் பொருட்டு முழங்கும் பெரிய முழக்கத்தையுடைய சாப்பறை முழங்கும் சுடு ய வாழ்த்தியது காடு வாழ்த்து என்னும் துறையாம்.