(எ.டு)
66
புறப்பொருள்
குருகு பெயரிய குன்றெறிந் தானும்
உருகெழு காந்தள் மலைந்தான்-பொருகழல்
கார்கருதி வார்முரசம் ஆர்க்கும் கடற்றானைப் போர்கருதி யார்மலையார் பூ.
கார்முல்லை:
255
பகைவரால் வெல்லுதற்கரிய வலிமை பொருந்திய பாசறை
யிடத்தாராகிய நம் தலைவர்
வினைமுடிந்து வருவதற்கு
முன்னரே முகில் நீரை முகந்து கொண்டு வந்தது என்று கூறுவது கார்முல்லை என்னும் துறையாம்.
(எ.டு)
"புனையும் பொலம்படைப் பொங்குளைமான் திண்தேர்
துனையும் துனைபடைத் துன்னார்-முனையுள்
அடல்முகந்த தானை யவர்வாரா முன்னம் கடல்முகந்து வந்தன்று கார்.'
கால்கோள்:
கால்கோளாவது. நடுகல் நடுவதற்குரிய இடத்தைத் தேர்ந் தெடுத்து அக்கல்லை நடுவதற்குரிய அடிப் படையை நன்நாளில் அமைப்பதாம்.
(எ.டு)
66
'காப்புநூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப் பூப்பலி பெய்து புகைகொளீஇ- மீப்படர்ந்த காளை நடுகற் சிறப்பயர்ந்து கால்கொண்மி னாளை வரக்கடவ நாள்
காவல்முல்லை: (அ)
ஒரு மன்னனுக்குக் காவல் தொழிலின் இயல்பைப் பிறர் எடுத்துக் கூறுதல் காவல் முல்லை என்னும் துறையாம்
(எ.டு)
“ஊறின் றுவகையுள் வைக உயிரோம்பி
ஆறிலொன் றானா தளித்துண்டு- மாறின்றி