256
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
வான்காவல் கொண்டான் வழிநின்று வைகலும் தான்காவல் கொண்டல் தகும்.”
காவல் முல்லை: (ஆ)
99
கடல் சூழ் கண்ணகல் ஞாலத்தின்கண் வேந்தனது காவல் மிகுதியைக் கூறியதும் காவல் முல்லை என்னுந் துறையாம்.
(61.6)
“பெரும் பூண் சிறுதகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க்
கருங்கழல் வெண்குடையான் காவல்-விரும்பான் ஒருநாள் மடியின் உலகின்மேல் நில்லாது
இருநாள் வகையார் இயல்பு.
கிணை நிலை: (அ)
செல்வம் பெருகும் அரண்மனையிடத்தே தடாரிப் பறை கொட்டுபவன் தான் பெற்ற வளத்தைக் கூறியது கிணை நிலை என்னுந் துறையாம்.
(எ.டு)
“வெள்ளி முளைத்த விடியல் வயல்யாமை அள்ளகட் டன்ன அரிக்கிணை-வள்ளியோன் முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமுன் என்கடை நீங்கிற் றிடர்.”
கிணைநிலை: (ஆ)
கிணைப் பறையைக் கொட்டுபவன் வேளாளனுடை டைய புகழைச் சொல்லியதும் கிணை நிலை என்னுந் துறையாம்.
(எ.டு)
“பகடுவாழ் கென்று பனிவயலுள் ஆமை அகடுபோல் அங்கண் தடாரித்-துகடுடைத்துக் குன்றுபோற் போர்விற் குரிசில் வளம்பாட இன்றுபோம் எங்கட் கிடர்.’
குடி நிலை:
وو
கரந்தை மறவர்தம் குடியினது வரலாற்றைப் புகழ்ந்து கூறியது குடிநிலை என்னும் துறையாம்