260
(6.6)
66
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
வரிப்பந்து கொண்டொளித்தாய் வாள்வேந்தன் மைந்தா அரிக்கண்ணி அஞ்சி அலற-எரிக்கதிர்வேற்
செங்கோலன் நுங்கோச் சினக்களிற்றின் மேல்வரினும் எங்கோலம் தீண்டல் இனி.”
குறுங்கலி:
தலைவன் தலைவியை அறவே கைவிட்டுப் பிற மகளிரை விரும்புவதற்கு அவன் நெஞ்சத்தே மாறுபட்டெழுந்த காமவேட்கை கெடும்படி கூறியது குறுங்கலி என்னும் துறையாம்.
(6.6)
“பண்ணாவாம் தீஞ்சொல் பவளத் துவர்ச் செவ்வாய்
பெண்ணாவாம் பேரல்குற் பெய்வளை-கண்ணாவாம். நன்னலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ
தொன்னலம் உண்டார் தொடர்பு.
குற்றிசை:
தலைவன் தலைவியோடு இறுதிவரை வாழாது இடையே கைவிட்டது குற்றிசை என்னும் துறையாம்.
(எ.டு)
66
கரிய பெருந்தடங்கண் வெள்வளைக்கை யாளை மரிய கழிகேண்மை மைந்த- தெரியின்
விளிந்தாங் கொழியினும் விட்டகலார் தம்மைத் தெளிந்தாரில் தீர்வது தீது."
குற்றுழிஞை: (அ)
கிடுகுப் படையை யுடைய உழிஞைப் படை மறவர்கள் கூத்தாடிக் கொண்டு நொச்சியாரது மதிலை அடைதலும் குற்று ழிஞை என்னும் துறையாம்.
(61.6)
“நிரைபொறி வாயில் நெடுமதிற் சூழி
வரைபுகு புள்ளினம் மான-விரைபடைந்தார் வேலேந்து தானை விறலோன் விறல்மறவர் தோலேந்தி ஆடல் தொடர்ந்து.'
99