புறப்பொருள்
அரண் முருங்க ஆகோள் கருதினடையார் முரண்முருங்கத் தான்முந் துறும்.”
கொற்றவள்ளை: (அ)
267
வேந்தனது குறையாத வெற்றிச்சிறப்பினால் பகைவர் நாடு அழிவிற்கு இரங்கித் தோற்றோனை விளங்கக் கூறுவது கொற்ற வள்ளையாகும்.
(எ.டு)
“வேரறுகு பம்பிச் சுரைபரந்து வேளைபூத்து ஊரறிய லாகா துடைந்தனவே-போரின்
முகையவிழ்தார்க் கோதை முசிறியோர் கோமான்
அகையிலைவேல் காய்த்தினார் நாடு"
கொற்றவள்ளை: (ஆ)
வஞ்சி வேந்தனது புகழை வள்ளைப் பாட்டால் எடுத்தோதி அம்மன்னனின் பகைவர் நாட்டின் அழிவிற்கு வருந்தியதும் கொற்ற வள்ளை என்னுந்துறையாம்.
(எ.டு)
66
வ
'தாழார மார்பினான் தாமரைக்கண் சேந்தனவாற் பாழாய்ப் பரிய விளிவதுகொல்- யாழாய்ப் புடைத்தேன் இமிர்கண்ணிப் பூங்கண் புதல்வர் நடைத்தேர் ஒலிகறங்கு நாடு”
கொற்றவஞ்சி:
வஞ்சி வேந்தனது வாட்போரினுடைய வெற்றியைச் சிறப் பித்துக் கூறுவது கொற்றவஞ்சி என்னுந்துறையாம்.
(எ.டு)
“அழலடைந்த மன்றத் தலந்தயரா நின்றார்
நிழலடைந்தே நின்னையென் றேத்திக்-கழலடையச் செற்றங்கொண் டாடிச் சிலைத்தெழுந்தார் வீந்தவியக் கொற்றங்கொண் டெஃகுயர்த்தான் கோ
சால்புமுல்லை:
பல நற்குணங்களாலும் நிறைந்த சான்றோரது அமைதியைச் சொல்லியது சால்பு முல்லை என்னும் துறையாம்.