புறப்பொருள்
பேதையைப் பெண்ணியலைப் பெய்வளையை என்மார்பிற் கோதையைக் கொண்டளித்த கூற்று.
சுரத்துய்த்தல்:
269
கடத்தற்கரிய வழியிடத்தும் அகன்ற காட்டின் கண்ணும் வெட்சி மறவர்தாம் கைப்பற்றிய பசுக்கூட்டங்களை வருந்தாமற் செலுத்தியது சுரத்துய்த்தல் என்னுந் துறையாம்.
(எடு)
புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும் வின்மேல் அசைஇயவை வேல்கழலான் - தன்மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்
நெடுவரை நீழல் நிரை.
செருவிடை வீழ்தல்:
அகழியையும் காவற்காட்டையும் பகைவர் சிதைக்காதவாறு காத்துப் போரிலே பட்ட நொச்சி மறவருடைய வெற்றியைக் கூறியது செருவிடை வீழ்தல் என்னுந்துறையாம்.
(எ.டு)
“ஈண்டரில் சூழ்ந்த இளையும் எரிமலர்க் காண்தகு நீள்கிடங்குங் காப்பாராய்-வேண்டார் மடங்கல் அனைய மறவேலோர் தத்தம் உடம்பொடு காவல் உயிர்”
செலவழுங்கல்:
தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்து பின்னர்ச் செலவழுங்கியது செலவழுங்கல் என்னும் துறையாம். (எ.டு)
“நடுங்கி நறுநுதலாள் நன்னலம்பீர் பூப்ப
ஒடுங்கி உயங்கல் ஒழியக்-கடுங்கணை வில்லேர் உழவர் விடரோங்கு மாமலைச் செல்லேம் ஒழிக செலவு.”