தலைக்காஞ்சி:
புறப்பொருள்
271
போர்க்களத்திலே பெரும்போர் செய்து பகைவரைக்
கலக்கி இறுதியில் மாண்ட மறவனுடைய தலையைப்
பாராட்டியது தலைக்காஞ்சி என்னும் துறையாம்.
(எ.டு)
66
“விட்டிடினென் வேந்தன் விலையிடின்என் இவ்வுலகின்
இட்டுரையின் எய்துவ எய்திற்றால்-ஒட்டாதார்
போர்தாங்கி மின்னும் புலவாள் உறைகழியாத தார்தாங்கி வீழ்ந்தான் தலை.
தலைத்தோற்றம்:
99
வெட்சி மறவர் ஆத்திரளைக் கைக் கொண்டு அவர்தம் சுற்றத்தார்கள் மகிழ்தற்கேதுவாக ஊரின் அணித்தே வந்து தோன்றியது தலைத்தோற்றம் என்னுந் துறையாம்.
(எ.டு)
“மொய்யணல் ஆனிரை முன்செல்லப் பின்செல்லும்
மையணற் காளை மகிழ்துடி-கையணல்
வைத்த எயிற்றியர் வாட்கண் இடனாட
உய்த்தன் றுவகை ஒருங்கு.
தலைமாராயம்:
போரிலேபட்ட மறவன் தலையைக் கொணர்ந்தவன் மன மகிழ்ச்சியால் நிரம்பும் படி காஞ்சிவேந்தன் பொருள் வழங்கியது தலைமாராயம் என்னுந்துறையாம்.
(6.6)
“உவன்தலை என்னும் உறழ்வின்றி யொன்னார் இவன்தலையென் றேத்த இயலும்-அவன்தலை தந்தாற்கு நல்கல் வியப்போ கிளர்ந்தேத்தி வந்தார்க் குவந்தீயும் வாழ்வு
தலையொடுமுடிதல்:
போரின்கண் பட்ட
கணவனின் தலையைக் கண்ட
வழி
அத்தலையுடனே அவன் மனைவி இறந்தது தலையொடு
முடிதல் என்னுந்துறையாம்.