(எ.டு)
புறப்பொருள்
“தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும் பழிச்சிய சீர்ப்பாசறை வேந்தன்-விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன புல்லணலார் வெய்துயிர்க்கும் புண்
தழிஞ்சி: (ஆ)
273
வஞ்சி வேந்தன் படை தமது நாட்டினது எல்லையிற் புகாத வாறு அருவழியைக் காஞ்சியார் காத்ததும் தழிஞ்சி என்னும் துறையாம்.
(எ.டு)
66
"குலாவுஞ் சிலையார் குறும்புகொள வெஃகி
உலாவு முழப் பொழிக வேந்தன்-கலாவும் இனவேங்கை யன்ன இகல்வெய்யோர் காவல் புனவேய் நரலும் புழை.
தழிஞ்சி: (இ)
போரின்கண்
ஒரு மறவன் தனக்கு ஆற்றாது புறங்
காட்டுவார்பால் படைவிடாத பேராண்மையுடையனாதலைக் கண்டோர் கூறியது தழிஞ்சி என்னும் துறையாம்.
(எ.டு)
66
'கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினும்
தான்படை தீண்டாத் தறுகண்ணன்-வான்படர்தல் கண்ணியபி னன்றிக் கறுத்தார் மறந்தொலைதல் எண்ணியபின் போக்குமோ எஃகு.
தன்னை வேட்டல்: (அ)
தம் வேந்தன் போரின்கண் இறந்தமை பொறாது ஒரு போர் மறவன் அக் களத்திலேயே தனது உயிரைப் போக்கியது தன்னை வேட்டல் என்னுந் துறையாம்.
(எ.டு)
66
“வானம் இறைவன் படர்ந்தென வாள்துடுப்பா மானமே நெய்யா மறம்விறகாத்-தேனிமிரும்