புறப்பொருள்
மலைமலிந் தன்ன மார்பம்
முலைமலிந் தூழூழ் முயங்குங் காலே.”
நயப்புற்றிரங்கல்:
285
தலைவியின் புணர்ச்சியின்பத்தைப் பெரிதும் விரும்பிய தலைவன் சொல்லெதிர் பெறாமையின் அவளைப் பெரிதும் புகழ்ந்து நயப்புற்றிரங்கல் என்னுந் துறையாம்.
(எ.டு)
“பெருமட நோக்கிற் சிறுநுதற் செவ்வாய்க்
கருமழைக்கண் வெண்முறுவல் பேதை- திருமுலை
புல்லும் பொறியி லேனுழை
நில்லா தோடுமென் நிறையில் நெஞ்சே.”
நல்லிசை நிலை:
போர்க்களத்துத் தன் தலைவன் பகைவரின் வஞ்சகத்தால் கால்லப்பட்டான் என்றுசினந்து, பெரும்படைத் தலைவன் தலைமயங்கிப் பொருத நல்ல நிலைமையைக் கூறுவது நல்லிசை நிலையாகும்.
நலம் பாராட்டல்:
காமத்துன்பம்
பெருக
அணிகலன்களையுடை
ய
அத்தலைவியினது அழகைத்தலைவன் கொண்டாடியது நலம்
பாராட்டல் என்னுந் துறையாம்.
(எ.டு)
“அம்மென் கிளவி கிளிபயில ஆயிழை
கொம்மை வரிமுலை கோங்கரும்பு-இம் மலை நறும்பூஞ் சாரல் ஆங்கண்
குறுஞ்சுனை மலர்ந்தன தடம்பெருங் கண்ணே."
நாடு வாழ்த்து:
முழந்தாளின் கீழேயும் நீண்டு தாழ்ந்த பெரிய கையினை யுடைய மன்னனது நாட்டின் வளத்தைக் கூறியது நாடு வாழ்த்து என்னும் துறையாம்.