(எ.டு)
புறப்பொருள்
289
“போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்
கார்க்கடல் பெற்ற கரையன்றோ- போர்க் கெல்லாந் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே ரேனாதிப் பட்டத் திவன்”
நெடு மொழி கூறல்: (ஆ)
கரந்தை மறவன் ஒருவன் தன் அரசனுக்குத் தனது வீரத்தின் சிறப்பைத் தானே எடுத்துக் கூறியது நெடுமொழி கூறல் என்னும் துறையாம்.
(எ.டு)
"ஆளமர் வெள்ளம் பெருகின் அதுவிலக்கி வாளொடு வைகுவேன் யானாக-நாளும் கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோய் ஈயப் பிழிமகிழ் உண்பார் பிறர்."
நெடு மொழி கூறல்: (இ)
தன்னிடத்தில் உள்ள போர்த்தொழிலின் முயற்சியாலே
வஞ்சினங்களைத் தன்னோடு கூட்டிக் கூறுதல்.
(எ.டு)
“தானால் விலங்காற் றனித்தாற் பிறன்வரைத்தால்
մ
யானை யெறித லிளிவரவால் யானை
யொருகை யுடைய தெறிவலோ யானு
மிருகை சுமந்துவாழ் வேன்”
நெடுமொழி வஞ்சி:
ஒரு மறவன் தன் பகைவர் படையை நெருங்கித் தனது ஆண்மைத் தன்மையைத் தானே உயர்த்திச் சொல்லியது நெடு மொழிவஞ்சி என்னுந் துறையாம்.
(எ.டு)
66
“இன்னா ரெனவேண்டா என்னோ டெதிர்சீறி
முன்னர் வருக முரணகலும்-மன்னர்
பருந்தார் படையமருட் பல்லார் புகழ
விருந்தா யடைகுறுவார் விண்”