290
நொச்சித்திணை:
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தமது அரணைப் பாதுகாத்தற் பொருட்டு அவ்வரணகத்துள்ள அரசன் நொச்சிப் பூவைச் சூடி அதைப் பாதுகாத்தல் நொச்சித் திணையாம்.
(6.6)
“ஆடரவம் பூண்டான் அழலுணச் சீறிய கூடரணங் காப்போர் குழாம்புரையச்-சூடினார் உச்சி மதிவழங்கும் ஓங்கு மதில்காப்பான் நொச்சி நுதிவே லவர்’
பகட்டுமுல்லை:
ய
வேளாண் தலைவனை உழைப்பாலும் சுமை பொறுத்த லானும் அவனுடைய எருதோடு உவமித்துக் கூறியது பகட்டு முல்லை என்னும் துறையாம்.
(எ.டு)
“உய்த்தல் பொறுத்தல் ஒழிவின் றொலிவயலுள்
எய்த்தல் அறியா திடையின்றி-வைத்த
படுநுகம் பூண்ட பகட்டொடு மானும்
நெடுமொழி எங்கணவன் நேர்.'
பகல் முனிவுரைத்தல்:
وو
ாம் முறை
மிக்க
தலைவனைப் புணர்தல் நிமித்தம் இரண்ட காணுதற்கு உறுதி கொண்ட தலைவி, துன்பம் நெஞ்சுடையளாய்ப் பகற்பொழுதை வெறுத்துக் கூறியதனைக் கூறுவது பகல் முனிவுரைத்தல் என்னும் துறையாம்.
(61.6)
66
தன்கண் அளியவாய் நின்றேற்குத் தார்விடலை வன்கண் நல்கான் எனவாடும்- என் கண்
இடரினும் பெரிதால் எவ்வம்
படரினும் பெரிதாற் பாவியிப் பகலே.
படை இயங்கு அரவம்:
பசுக் கூட்டங்களைக் கவர்தற்கு எழுந்த படை பாசறைப் புறத்துப் பொருந்தும் பேரொலியும், நிரைமீட்டற்கு எழுந்த படை விரைந்து செல்லும் பேரொலியுமாம்.