294
(எ.டு)
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
“வெல்புரவி பூண்ட விளங்கு மணித்திண்டேர்
நல்கிய பின்னும் நனிநீடப்- பல்போர்
விலங்கும் கடல்தானை வேற்றார் முனைபோல் கலங்கும் அளித்தென் கடும்பு.
பரிசில் விடை:
99
உள்ளம் மகிழுமாறு தனது வெற்றியைப் புகழ்ந்து பாடிய பரிசிலர்க்கு அரசன் அரசன் பரிசிற் பொருளை வழங்கி அவர் இன்புறுமாறு விடை கொடுத்தது பரிசில் விடை என்னும் துறையாம்.
(எ.டு)
“படைநவின்ற பல்களிறும் பண்ணமைந்த தேரும் நடைநவின்ற பாய்மாவும் நல்கிக்- கடையிறந்து முன்வந்த மன்னர் முடிவணங்குஞ் சேவடியாற் பின்வந்தான் பேரருளி னான்.'
பருவமயங்கல்: அ.
தலைவியின் ஆற்றாமை கண்டு தோழி காலத்தை ஐயுற்றுத் துன்பம் அடைந்தது பருவமயங்கல் என்னும் துறையாம்.
(எ.டு)
“பெரும்பணை மென்தோள் பிரிந்தாரெம் முள்ளி
வரும்பருவம் அன்றுகொல் ஆங்கொல்- சுரும்பிமிரும் பூமலி கொன்றை புறவெல்லாம் பொன்மலரும் மாமயிலும் ஆலும் மலை.
பருவமயங்கல்: ஆ.
தலைவி, தலைவன் குறித்த பருவம் நிகழ்ந்தும் அப்பருவம் அன்றெனத் தெளிதலும் பருவமயங்கல் என்னும் துறையாம். (எ.டு)
"பொறிமயில் ஆலின பொங்கர் எழிலி
சிறுதுவலை சிந்தின சிந்த- நறிய