300
(எ.டு)
66
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
ஓடுக கோல்வளையும் ஊரும் அலரறைக
தோடவிழ் தாழை துறைகமழக்-கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் புலம்புகொள் மால்மாலை நீங்கானென் நெஞ்சகத்துள் நின்று.
பிழைத் தோர்த் தாங்குங்காவல்:
தன்னிடத்துப் பிழை செய்தோரைப் பொறுத்தருளும்
பாதுகாவலாம்.
(எ.டு)
“அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தற் றலை
பிள்ளைத் தெளிவு:
99
கரந்தை மறவன் போரின்கண் தான்பட்ட விழுப்புண்ணை விரும்பித் துடி முழக்கத்தோடே போர்க்களத்தின்கண் கூத்தாடியது பிள்ளைத் தெளிவு என்னும் துறையாம்.
(எ.டு)
"மேவார் உயிருணங்க மேன்முடித்த பிள்ளையன் பூவா ளுறைகழியாப் போர்க்களத்துள்-ஓவான் துடியிரட்டி விட்ட தொடுகழலார் முன்னின்று அடியிரட்டித் திட்டாடும் ஆட்டு.”
பிள்ளைப் பெயர்ச்சி:
தீ நிமித்தம் உண்டாகவும் அதனைப் பொருட்படுத்தாது வெட்சி மறவரோடு போர்செய்து வென்று ஆனிரை மீட்டு வந்த மறவனுக்கு வேந்தன் தண்ணளி செய்தது பிள்ளைப் பெயர்ச்சி என்னும் துறையாம்.
(6.6)
"பிணங்கமருட் பிள்ளை பெயர்ப்பப் பெயராது
அணங்கர்செய் தாளெறிதல் நோக்கி - வணங்காச்
சிலையளித்த தோளான் சினவிடலைக் கன்றே
தலையளித்தான் தண்ணடையுந் தந்து.