(எ.டு)
புறப்பொருள்
“வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கா லஞ்சி யொதுங்காதார் யார்யாவர்- மஞ்சுசூழ் வான்றோய் புரிசை பொறியு மடங்கின வான்றோ ரடக்கம்போ லாங்கு
புறநிலை வாழ்த்து;
307
வழிபடுகிற தெய்வம் நின்னைப் பாதுகாக்கக் குற்றந் தீர்ந்த செல்வமொடு வழிவழியாகச் சிறந்து விளங்குக என்று தெய்வத்தைப் புற நிறுத்தி வாழ்த்துவது புறநிலை வாழ்த்தாகும். அங்ஙனம் வாழ்த்திய அச்செய்யுள் ஆசிரியப்பாவினும் மருட்பாவினும் வரும்.
பூக்கொள் நிலை:
காஞ்சி மறவர் போர் செய்தற் பொருட்டுத் தம் மன்னன் வழங்கிய பூவினை ஏற்றுக் கொண்டது பூக்கொள் நிலை என்னுந் துறையாம்.
(எ.டு)
"பருதிசெல் வானம் பரந்துருகி யன்ன குருகியா றாவதுகொல் குன்றூர்-கருதி மறத்திறத்தின் மாறா மறவரும் கொண்டார் புறத்திறுத்த வேந்திரியப் பூ
பூசல்மயக்கு: (அ)
وو
இறந்துபட்ட தாமரை
மலர் போன்ற பாலகனின்
சுற்றத்தார் அழுகை யாரவாரத்தைக் கூறியது பூசல் மயக்கு என்னும் துறையாம்.
(எ.டு)
“அலர்முலை அஞ்சொல் அவணொழிய அவ்விற்
குலமுதலைக் கொண்டொளித்தல் அன்றி- நிலமுறப்
புல்லிய பல்கிளைப் பூசல் பரியுமோ
சொல்லிய வந்தொழியக் கூற்று.”