(எ.டு)
66
புறப்பொருள்
வயங்குளைமான் தென்னன் வரையகலம் தோய இயங்கா இருளிடைச் செல்வேன்- மயங்காமை ஓடரிக் கண்ணாய் உறைகழிவாள் மின்னிற்றால் மாட மறுகின் மழை.
பெருமை:
وو
311
தன்னைச் சார்ந்த படை வீரர்கள் பகைவர்முன் நிற்க முடி யாமல் ஓடிய விடத்து, விரைந்து வரும் நீர்ப் பெருக்கை ஒரு கற்றூண் நின்று தடுக்குமாறு போலத்தான் ஒருவனே எதிர்நின்று பகைவரை எதிர்த்தலாம்.
(எ.டு)
66
'கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன் றார்ப்பற்றி யோர்தரு தோணோக்கித் -தார்ப்பின்னர் ஞாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின் றேர்க்குழா நோக்கித்தன் மாநோக்கிக் கூர்த்த கணை வரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக் கிணைவனை நோக்கி வரும்."
பெரும்படை:
நடுகல் அமைத்தபின் கோயிலாக எழுப்பி, அதில் அவன் பீடும் பெயரும் எழுதி, அக்கல்லிற்குப் பெருஞ்சிறப்புகளைச் செய்வது பெரும்படை என்னுந் துறையாம்.
(6.6)
“கைவினை மாக்கள் கலுழக்க ணோக்கிழந்து
செய்வினை வாய்ப்பவே செய்தமைத் தோர் மொய்போர்
மறவர் பிணம்பிறக்கி வாள்வாய்த்து வீழ்ந்தோன் பிறபெயர்சூழ் கன்மேற் பெரிது
பெருவஞ்சி :
வஞ்சிவேந்தன் இரண்டாவதாகத்தன் பகைவர் நாட்டைத் தீக்கொளீஇயது பெருவஞ்சி என்னும் துறையாம் .
(எ.டு)
“பீடுலா மன்னர் நடுங்கப் பெரும் பகை
ஊடுலாய் வானத் தொளிமறைப்ப- நாடெலாம்