புறப்பொருள்
இருளொடு வைகா திடம்படு ஞாலத்து
அருளொடு வைகி அகல்.”
பொருளொடு புகறல்:
315
உலகின் கண் பொய்ப் பொருளின் பற்றினை நீக்கி மெய்ம்மை யாகிய இறைப் பொருளை விரும்பியது பொருளொடு புகறல் என்னுந் துறையாம்.
(எ.டு)
66
'ஆமினி மூப்பும் அகன்ற திளமையும்
தாமினி நோயும் தலைவரும்-யாமினி மெய்யைந்து மீதூர வைகாது மேல்வந்த ஐயைந்தும் ஆய்வ தறிவு.”
பொலிவுமங்கலம்:
மன்னன் மனம் உவக்குமாறு
அவனுக்கு
மகன்
பிறத்தலானே பலரும் கொண்டாடியது பொலிவு மங்கலம்
என்னும் துறையாம்.
(எ.டு)
“கருங்கழல் வெண்குடைக் காவலற்குச் செவ்வாய்ப்
பெருங்கண் புதல்வன் பிறப்பப்- பெரும்பெயர் விண்ணார் மகிழ்ந்தார் வியலிடத்தார் ஏத்தினார் எண்ணார் அவிந்தார் இகல்.”
பொழுது கண்டு இரங்கல்:
உயிர் நிற்றலைப் பொருளாய் நெட்டுயிர்ப் பெறிந்து
சுழலும் பொன்வளையலையுடைய ய பொழுதினைக்கண்டு வருந்தியது.
(எ.டு)
"இறையே இறந்தன எல்வளை உண்கண் உறையே பொழிதலும் ஓவா - நிறையைப் பருகாப் பகல்கரந்த பையுள்கூர் மாலை உருகா உயங்கும் உயிர்.”
தலைவி மாலைப்