போர்மலைதல்:
புறப்பொருள்
317
கரந்தையார், ஆனிரையைக் கைப் பற்றிச் சென்ற வெட்சி மறவரை எய்தி அவர் மேலும் செல்லாதவாறு வளைத்துக் கொண்டு போர் செய்தது போர் மலைதல் என்னும் துறையாம்.
(எ.டு)
“புலிக்கணமும் சீயமும் போர்க்களிறும் போல்வார்
வலிச்சினமு மானமுந் தேசும்- ஒலிக்கும்
அருமுனை வெஞ்சுரத் தான்பூசற் கோடிச்
செருமலைந்தார் சீற்றஞ் சிறந்து.”
மகட் பாற்காஞ்சி:
ஒருவன் தன் மகளை விரும்பும் அரசனோடு மாறுபடுவது மகட் பாற் காஞ்சியாம்.
(எ.டு)
66
'அளிய கழல்வேந்தர் அம்மா அரிவை
எளியளென்று எள்ளி உரைப்பிற்- குரியாவோ
பண்போற் கிளவியிப் பல்வளையாள் வாள்முகத்த கண்போற் பகழி கடிது”
மகட்பால் இகல்:
நொச்சியரசன் மகளைத் திருமணம் செய்து கொள்ள
விரும்பிய உழிஞை மன்னனது மன்னனது
நிலைமையைக்
மகட்பால் இகல் என்னும் துறையாம்.
கூறியது
(எ.டு)
“அந்தழை அல்குலும் ஆடமை மென்தோளும் பைந்தளிர் மேனியும் பாராட்டித்- தந்தை புறமதில் வைகும் புலம்பே தருமே
மறமதில் மன்னன் மகள்.
மகள் மறுத்து மொழிதல்:
وو
உழிஞையரசன் நொச்சியானது மகளைத் தனக்கு மணம் செய்து தரும்படி வேண்ட நொச்சி மன்னன் மறுத்துக் கூறியது மகள் மறுத்து மொழிதல் என்னும் துறையாம்.