318
(6.6)
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
66
ஒள்வாள் மறவர் உருத்தெழுந் தும்பர்நாள்
கள்வார் நறுங்கோதை காரணமாக்- கொள்வான் மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக் கருங்கண்ணி வெண்கட்டிற் கால்.
மங்கல நிலை: (அ)
துயில் நீத்தெழும் மன்னர்முன் மங்கலம் கூறிய மிகுதியைச் சொல்லியது மங்கலநிலை என்னும் துறையாம்.
(எ.டு)
66
விண்வேண்டின் வேறாதல் மங்கலம் வேந்தர்க்கு
மண்வேண்டின் கைகூப்பல் மங்கலம்- பெண்வேண்டின் துன்னன் மடவார்க்கு மங்கலம் தோலாப்போர்
மன்னன் வரைபுரையும் மார்பு.'
மங்கல நிலை: (ஆ)
99
நிலைபெறும் சிறப்பினையுடைய ஆக்கத்தை ஒரு மன்னன் எய்தினான் என்று கூறுதலும் மங்கல நிலை என்னும் துறையாம். (எ.டு)
66
தீண்டியும் கண்டும் பயிற்றியும் தன்செவியால்
வேண்டியும் கங்குல் விடியலும்- ஈண்டிய
மங்கல ஆய நுகர்ந்தான் மறமன்னர் வெங்களத்து வேலுயர்த்த வேந்து.”
மடலூர்தல்:
தலைவன் தலைவியைப் பெற இடையூறு மிக்குழி ஊர் அம்பலத்தின் நடுவே பித்தர் போலப் பலவற்றைக் கூறி மடல் மாவைச் செலுத்தியது மடலூர்தல் என்னும் துறையாம்.
(எ.டு)
“இன்றிப் படரோ டியானுழப்ப ஐங்கணையான் வென்றிப் பதாகை எடுத்தானாம்- மன்றில் தனி மடமான் நோக்கி தகைநலம்பா ராட்டிக்
குனிமடல்மாப் பண்ணிமேற் கொண்டு.