324
மாலைநிலை:
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
இறந்துபட்ட தன் கணவனுடனே நெருப்பிலே புகவேண்டித் தலைவி மாலைப் பொழுதிலே நின்றது மாலைநிலை என்னும் துறையாம்.
(எ.டு)
"சோலை மயிலன்னாள் தன்கணவன் சொல்லிய சொல் மாலை நினையா மனங்கடைஇக்- காலைப்
புகையழல் வேலோன் புணர்ப்பாகி நின்றாள் அகையழல் ஈமத் தகத்து.
முதுஉழிஞை: (அ)
மதிலகத்துள்ள
நொச்சி மறவருடைய
மாண்பினை
உழிஞை ஒற்றர் கூறுதல் முது உழிஞை என்னும் துறையாம்.
(எ.டு)
66
"அறியார் வயவர் அகத்திழிந்த பின்னும்
நெறியார் நெடுமதிலுள் நேரார்- மறியாம்
கிளியொடு நேராங் கிளவியார் வாட்கண் களியுறு காமங் கலந்து.’
முது உழிஞை: (ஆ)
உழிஞை மறவர் நொச்சியாரது அரணகத்தே பாய்கின்ற பறவையைப் போன்று யாண்டும் குதித்தது முது உழிஞை என்னும் துறையாம்.
(எ.டு)
"கோடுயர் வெற்பின் நிலங்கண் டிரைகருதும்
தோடுகொள் புள்ளின் தொகையொப்பக்- கூடார்
முரணகத்துப் பாற முழவுத்தோள் மள்ளர்
அரணகத்துப் பாய்ந்திழிந்தார் ஆர்த்து.
முது காஞ்சி:
எல்லாப் பொருள்கட்கும் மேலாய் வரும் மெய்ப் பொருளைத் தக்கவிடத்து உணர்த்தி மற்றைய பொருள்களின் நிலையாமையையும் முறைப்படக் கூறியது முதுகாஞ்சி என்னும் துறையாம்.