326
முதுமொழிவஞ்சி:
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
ஒரு மறவனுடைய குடி முதல்வனைப் புகழ்ந்து கூறியது முதுமொழி வஞ்சி என்னுந் துறையாம்.
(6.6)
"குளிறு முரசங் குணில்பாயக் கூடார்
ஒளிறுவாள் வெள்ளம் உழக்கிக்- களிறெறிந்து
புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய் தண்ணடை நல்கல் தகும்’
முரச உழிஞை:
உழிஞை வேந்தனது முரசின் நிலையைக் கூறியது முரச
உழிஞை என்னும் துறையாம்.
(எ.டு)
66
கதிரோடை வெல்களிறு பாயக் கலங்கி
உதிரா மதிலும் உளகொல்- அதிருமால்
பூக்கண் மலிதார்ப் புகழ்வெய்யோன் கோயிலுள் மாக்கண் முரச மழை.
முரசவாகை:
அரசனது வெற்றிமுரசின் தன்மையைச் சொல்லியது முரச வாகை என்னும் துறையாம்.
(எ.டு)
“மதியேர் நெடுங்குடை மன்னர் பணிந்து
புதிய புகழ்மாலை வேய-நிதியம்
வழங்குந் தடக்கையான் வான்தோய் நகருள்
முழங்கும் அதிரும் முரசு."
முல்லை:
ய
பெரிய மலைபோன்ற மார்பினையுடைய தலைவன் தன்னை விரும்பின காதலையும் மடப்பத்தையும் உடைய தன் தலைவியைப் புணர்ந்த மகிழ்ச்சியினது மிகுதியைக் கூறியது முல்லை என்னும் துறையாம்.