புறப்பொருள்
329
செல்கணை மாற்றிக் குரிசில் சிறைநின்றான் கொல்கணைவாய் வீழ்தல் கொடிது.”
மூதில் முல்லை:
மறக்குடிப் பிறந்த மறவர்க்கேயன்றி அம்மறக்குடியிற் பிறந்த மடப்பத்தையுடைய பெண்டிர்க்கும் மறப் பண்பினைச் சிறப்பித்தது மூதில் முல்லை என்னும் துறையாம்.
(எ.டு)
66
“வந்த படைநோனாள் வாயின் முலைபறித்து வெந்திறல் எஃகம் இறைக்கொளீஇ-முந்தை முதல்வர்கல் தான்காட்டி மூதில் மடவாள் புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு.”
மூவகை நிலை:
பகைவர்கள் அஞ்சும் படியான காலாட்படை, யானைப் படை, குதிரைப் படை என்னும் முப்படைகளின் நிலையைக் கூறுவது மூவகை நிலையாகும்.
மெலிதல்:
தலைவி ஊரார் தூற்றுகின்ற பழிச் சொல்லுக்கு நாணி வருந்தி வாட்டத்துடன் இருப்பது மெலிதல் என்னும் துறையாம். (61.6)
66
'குரும்பை வரிமுலைமேற் கோல நெடுங்கண்
அரும்பிய வெண்முத் துகுப்பக்- கரும்புடைத்தோட்
காதல்செய் காமம் கனற்ற
ஏதி லாளற் கிழிந்தனென் எழிலே.'
மெலிவொடு வைகல்:
அலர்நாணி வருந்திய தலைவி மேலும் காமம் வருத்து வதால் வளையல்கள் கழலவும், அழகு கெடவும் வருந்திய தலைவியின் தளர்ச்சியின் மிகுதியைச் சொல்லியது மெலிவொடு வைகல் என்னும் துறையாம்.
(எ.டு)
“பிறைபுரை வாணுதல் பீரரும்ப மென்தோள்
இறைபுனை எல்வளை யேக- நிறைபுணையா