330
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
யாம நெடுங்கடல் நீந்துவேன்
காம ஒள்ளெரி கனன்றகஞ் சுடுமே."
னை கைக்கோள்:
யானை
உழிஞை மறவர் தம்மோடு பகை கொண்ட நொச்சியாரை வென்று அவர்தம் யானையையும், காவற்படையையும் கைப் பற்றியது யானை கைக்கோள் என்னும் துறையாம்.
(எ.டு)
“ஏவல் இகழ்மறவர் வீய இகல்கடந்து
காவலும் யானையும் கைக்கொண்டான் - மாவலான்
வம்புடை ஒள்வாள் மறவர் தொழுதேத்த
அம்புடை ஞாயில் அரண்."
யானைமறம்:
தும்பை மன்னனுடைய இளங்களிற்றினது தறுகண்மையைச் சொல்லியது யானைமறம் என்னும் துறையாம்.
(எ.டு)
66
அடக்கருந் தானை அலங்குதார் மன்னர் விடக்கும் உயிரும் மிசையக்- கடற்படையுள் பேயும் எருவையும் கூற்றுந்தன் பின்படரக் காயுங் கழலான் களிறு.
வஞ்சிக் காஞ்சி:
தன் கணவன் உயிரைப் போக்கிய அந்த வேலினாலேயே தன் உயிரை (இறந்தவன் மனைவி) நீப்பது வஞ்சிக் காஞ்சியாகும். (எ.டு)
இன்ப முடம்புகொண் டெய்துவிர் காண்மினோ வன்பி னுயிர்புரக்கு மாரணங்கு - தன்கணவ னல்லாமை யுட்கொள்ளு மச்சம் பயந்ததே
புல்லார்வேன் மெய்சிதைத்த புண்"
(தகடூர் யாத்திரை- புறத்திரட்டு-மூதின் மறம்-8)