20
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
எகரவினாவின் முன் நாற்கணமும் புணர்தல் :
எகரவினாவிடைச் சொல்லின் முன்னே உயிரெழுத்து களும், யகரமும் வந்தால் வகரமெய் தோன்றும் யகரம் ஒழிந்த மெய்கள் வந்தால் அவ்வந்த மெய்களே தோன்றும்.
(எ.டு) எ + அணி
=
எவ்வணி
எ + குதிரை
=
எக்குதிரை
எ+
=
நாடு எந்நாடு
6T + யானை எவ்யானை
=
‘எகின்' என்பதற்குச் சிறப்பு விதி :
அன்னப் பறவையின் பெயராகிய எகின் என்னுஞ்சொல் அல்வழியில் இயல்பாதலேயன்றி, வேற்றுமைப் புணர்ச்சியிலும் வல்லினம் வர இறுதி னகரம் இயல்பாதலும், இரு வழியிலும் ரு அகரச் சாரியை பொருந்த வல்லெழுத்தாவது அதற்கு இனமான மெல்லெழுத்தாவது மிகுதலும் விதியாகும்.
(எ.டு) எகின் + சிறை
=
எகின்சிறை
எகின் + தலை
=
எகின்தலை
எகின் + புள்
=
எகினப்புள்
=
எகினம்புள்
எச்சம் :
பிறிதோர் சொல்லொடும், பிறிதோர் குறிப்பொடும் முடிவு கொள்ளும் இயற்கையைப் பொருந்திய செய்யுள் எச்சமாகும். எனவே, எச்சம் சொல்லெச்சம் குறிப்பெச்சம் என இருவகைப்படும்.
(எ.டு) எச்சம் = குறைச் சொல்;
பிறிதொன்றைத் தழுவும் சொல்
எச்சத் தொடர் மொழி :
முடிவு பெறாது முற்றுத்தொடர் மொழிக்கு உறுப்பாக வருந்தொடர் மொழி, எச்சத் தொடர் மொழியாகும்.
(எ-டு) யானைக் கோடு
யானையது கோடு