338
வாள்செலவு:
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
வஞ்சியார் போர்க்கழைத்த பின்பு அவர் படையிடத்தே காஞ்சியரசன் வாளினைப் போகவிடுதல் வாள் செலவு என்னுந் துறையாம்.
(எ.டு)
“உணங்கு புலவறா ஒன்னார் குரம்பை
நுணங்கரில் வெம்முனை நோக்கி- அணங்கிய
குந்த மலியும் புரவியான் கூடாதார்
வந்தபின் செல்கென்றான் வாள்”
வாள்நாட் கோள்:
の
உழிஞை மன்னன் பகைவரது அரணைக் கைப்பற்ற
எண்ணி தனது வாளை நல்ல நாளில் புறவீடு விட்டது வாள்நாட் கோள் என்னும் துறையாம்.
(எ.டு)
66
வாணாட் கொளலும் வழிமொழிந்து வந்தடையாப் பேணார் பிறைதொடும் பேமதிற்-பூணார்
அணிகொள் வனமுலையார் ஆடரங்க மேறிப் பிணிகொள்பே யாடும் பெயர்த்து.
வாள்நிலை:
போருக்குப் புறப்படும் வஞ்சி வேந்தன் தன்வாளை நல்ல நாளில் புறவீடு விட்டது வாள் நிலை என்னுந்துறையாம்.
(எ.டு)
“அறிந்தவர் ஆய்ந்தநாள் ஆழித்தேர் மன்னன்
எறிந்தில ரொள்வா ளியக்கம்- அறிந்தி கலிப் பின் பகலே யன்றியும் பேணா ரகநாட்டு நண்பகலும் கூகை நகும்”
வாள்மங்கலம்: (அ)
இருபெரு வேந்தருள்ளும் வென்றவன் வாளினை வெற்றித் திருவின் மேல் நிறுத்தி நீராட்டுவது வாள்மங்கலமாகும்.