(எ.டு)
புறப்பொருள்
339
“செற்றவர் செங்குருதி யாடற்கு வாள்சேர்ந்த
கொற்றவை மற்றிவையுங் கொள்ளுங்கொள்- முற்றியோன் பூவொடும் சாந்தும் புகையவி நெய்ந்நறைத் தேவொடு செய்தான் சிறப்பு"
வாள்மங்கலம்: (ஆ)
கடல் போன்ற பெரிய படை
பரிய படையினையும் வலிய யா
ன
யினையும் உடைய வேந்தனது கொற்றவாளைப் புகழ்ந்தது வாள் மங்கலம் என்னும் துறையாம்.
(எ.டு)
“கொங்கவிழ் ஐம்பால் மடவார் வியன்கோயில்
மங்கலம் கூற மறங்கனலும்- செங்கோல்
நிலந்தரிய செல்லும் நிரைதண்தார்ச் சேரன் வலந்திரிய ஏந்திய வாள்.'
வாள் மண்ணுநிலை:
وو
உயர்ந்தோர்கள் வாழ்த்துரை வழங்க கடவுள் நீரினால் முழுக்காட்டிய உழிஞையரசனது கொற்றவாளினது மறப்பண் பினைச் சொல்லியது வாள்மண்ணுநிலை என்னும் துறையாம். (எ.டு)
66
“தீர்த்தநீர் பூவொடு பெய்து திசைவிளங்கக்
கூர்த்தவாள் மண்ணிக் கொடித்தேரான்-பேர்த்தும்
இடியார் பணைதுவைப்ப இம்மதிலுள் வேட்டான் புடையார் அறையப் புகழ்.
வாளோர் ஆடும் அமலை:
யானை மீது வருகின்ற பகைவனை எதிர்த்து, அவன் யானையைக் கொன்று, அவனுடன் போரிடும் படை வீரர்களின் பெருமையே வாளோர் ஆடும் அமலையாகும்.
(எ.டு)
66
ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாம்
கேளன்றிக் கொன்றாரே கேளாகி- வாள்வீசி