(எ.டு)
66
புறப்பொருள்
"அரும்பிற்கும் உண்டோ அலரது நாற்றம் பெருந்தோள் விறலி பிணங்கல்- சுரும்போடு அதிரும் புனலூரற் காரமிர்தம் அன்றோ முதிரும் முலையார் முயக்கு.
விறலி தோழிக்கு விளம்பல்:
341
தலைவனது முதுமையும் அப்பரத்தையர்க்குப் பெறுதற்கரிய மகிழ்ச்சியை உண்டாக்கும் என்று பாணிச்சி தோழி கேட்பச் சொல்லியது விறலிதோழிக்கு விளம்பல் என்னும் துறையாம்.
(எ.டு)
“உளைத்தவர் கூறும் உரையெல்லாம் நிற்க
முளைத்த முறுவலார்க் கெல்லாம்- விளைத்த பழங்கள் அனைத்தாய்ப் படுகளி செய்யும் முழங்கு புனலூரன் மூப்பு.
விறலியாற்றுப் படை:
வெற்றியை யுடைய மன்னனது புகழைப் பாடும் விறலியை ஒருவள்ளலிடத்து ஆற்றுப் படுத்துவது விறலியாற்றுப் படை
என்னும் துறையாம்.
(எ.டு)
“சில்வளைக்கைச் செவ்வாய் விறலி செருப்படையான் பல்புகழ் பாடிப் படர்தியேல்- நல்லவையோர்
ஏத்த விழையணிந் தின்னே வருதியாற்
பூத்த கொடிபோற் பொலிந்து."
வினைமுதிர்ச்சி(முற்றியமுதிர்வு):
புறத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலிற் செய்யும் போரின்றி அகத்தோன் படையை வென்று அப்புற மதிலைக் கைக் கொண்டு உள்மதிலை வளைப்பது வினைமுதிர்ச்சி யாகும்.
(எ.டு)
“கடல்பரந்து மேருச்சூழ் காலம் போற் சென்றோர்
கொடிமதில் காத்தோரைக் கொல்லக்- கடலெதிர்